மக்கள் பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்யவும் வங்கிகளை விட வட்டி அதிகம். இதில் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் கிடைக்கும். வட்டியோடு வரி சலுகையும் கிடைப்பதால் இது தான் சரியான ஆப்சன் எனலாம்.
அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டத்தின் நோக்கம் பணத்தை சேமிக்க மக்களை ஊக்குவிப்பதாகும். இதனால் தான் வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரி விலக்கையும் அளிக்கின்றது.
அந்த வகையில் நாம் இன்று நாம் பார்க்கவிருக்கும் திட்டம் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நாம் மாத மாதம் முதலீடு செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும்.
தொடர் வைப்பு நிதி உச்ச வரம்பு
இந்த திட்டத்தின் மூலம் நம்மால் இயன்ற தொகையை முதலீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வங்கி வட்டியினை அதிக வருமானத்தினை பெற்றுக் கொள்ளலாம். அஞ்சலகத்தின் இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச தொகை எதுவும் வரம்பு கிடையாது. இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 5.8% கிடைக்கும்.
எஸ்ஐபி மூலம் முதலீடு
இந்த திட்டத்தின் மூலம் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் போல முதலீடு செய்து கொள்ளலாம் என்பதால் கீழ்தட்டு மக்கள், நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இருவர் இணைந்தும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களே இந்த கணக்கினை நிர்வகிக்கலாம்.
5 ஆண்டுக்கு பிறகு எப்படி?
இதன் மூலம் முதிர்வுக்கு பிறகு ஒரு கணிசமான தொகையினை பெற முடியும். ஆக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு கணிசமான தொகையினை பெற முடியும்.
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக வட்டி விகிதம் 5.8% வட்டி கொடுக்கப்படுகின்றது. இதில் மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 5 வருடத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களது வருமானம் 48,740 ரூபாயாகும். இதன் மூலம் மொத்தம் 3,48,740 ரூபாயினை முதிர்வு தொகையாக பெறலாம்.
எஸ்ஐபி முதலீடு செய்தால்?
இந்த திட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டின் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்தால், 12% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். இதில் மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதற்கு வருமானம் 12% என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 5 ஆண்டுகள் கழித்து முதிர்வு தொகையாக 4,12,432 ரூபாயாக அதிகரிக்கலாம். இதன் மூலம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இதில் வட்டி வருவாயாக 1,12,432 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தம் 5 ஆண்டுகள் கழித்து 4,12,432 ரூபாயாக இருக்கலாம்.
எது பெஸ்ட்?
அஞ்சலக திட்டத்துட ன் ஒப்பிடும்போது எஸ் ஐ பியில் வருவாய் அதிகம் என்றாலும், அஞ்சலக திட்டத்தில் நிரந்தர வருமானம் ஆகும். அது பாதுகாப்பான ஒன்று. அதில் சந்தை அபாயம் என்பது இல்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் அப்படி இல்லை. இதில் சந்தை அபாயம் உண்டு. ஆக சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்யும் ஃபண்டுகள் மாற்றம் இருக்கலாம். இதில் வருமானம் அதிகம் என்றாலும், ரிஸ்கும் உண்டு.
More From GoodReturns

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications