இந்திய அரசாங்கம் அனைத்து பிரிவினருக்கும் உதவும் வகையில். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக திட்டங்களை வழங்குகிறது. இதற்கு சிறந்த வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள் என பல்வேறு நன்மைகளும் கிடைக்கிறது. அப்படி அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் குறைந்த ஆபத்தை கொண்ட முதலீட்டு திட்டம் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல் அல்லாமல் இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது.
வட்டி விகிதம்: போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. டைம் டெபாசிட் திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. உங்களுக்கு விருப்பமான திட்டத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்திற்கு பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.

காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. டைம் டெபாசிட் திட்டத்தில் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.
டைம் டெபாசிட் எப்படி வேலை செய்கிறது?: முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.
டைம் டெபாசிட் திட்டத்தின் வெவ்வேறு வகைகள்:
1. 1 வருட டைம் டெபாசிட்: 6.9 %
2. 2 வருட டைம் டெபாசிட்: 7.0 %
3. 3 வருட டைம் டெபாசிட்: 7.1 %
4. 5 வருட டைம் டெபாசிட்: 7.5 %
ரூ45,000 வட்டி வருமானம் பெறுவது எப்படி?: 7.50 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி வருமானமாக 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.
விண்ணப்பிப்பதற்கான தகுதி: 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் டைம் டெபாசிட் கணக்கைத் தொடக்கலாம். இளம் முதலீட்டாளர்களுக்கு TD சிறந்த தேர்வாக இருக்கும். கூடுதலாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சார்பாக தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளை திறக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, அதோடு நீங்கள் சேமிக்க விரும்பும் தொகையையும் சேர்த்து வழங்கவும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications