திருமணமான பல தம்பதியினர் தங்கள் துணைவியாருடன் சேர்ந்து நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என்று எண்ணுகின்றனர். நீங்களும் அப்படிப்பட்டவராக இருந்தால் உங்களுக்கு தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் ஒரு அற்புதமான அரசு திட்டம் குறித்துதான் பார்க்கவுள்ளோம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. அதன் பிறகு எந்த வேலையுமே செய்யாமல் மாதம், மாதம் நல்ல வருமானம் பெற முடியும். தம்பதிகள் இணைந்து ஒரு கணக்கை தொடங்கி முதலீடு செய்வதன் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ. 1,10,000 வரையில் வருமானம் பெறலாம்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்: இதனை ஆங்கிலத்தில் போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் என்று கூறுவார்கள். இந்தத் திட்டத்திற்கு சிறந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதிக வருமானம் பெற நினைப்பவர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு திட்டம் இதுவாகும். இதில் ஒரு முறை நீங்கள் முதலீடு செய்தால் தொடர்ந்து வருமானம் பெற முடியும்.

குறைந்தபட்ச முதலீடு: இது ஒரு முறை முதலீடு செய்யும் திட்டமாகும். எனவே ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை போல மாதா மாதம் முதலீடு செய்யலாம் என்று நினைக்காதீர்கள். ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம் வேண்டுமானால் ஆயிரம் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். தனிநபராக இருந்தால் தங்களுடைய கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கில் நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து முதலீடு செய்ய முடியும்.
வட்டி விகிதம்: தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அரசாங்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டம் இதுவாகும். இதனால் உங்களுடைய முதலீடுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதோடு உத்தரவாதமான வருமானத்தையும் பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.
எனவே ரிஸ்க் எடுக்காமல் வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், அரசு திட்டங்களை பரிசீலிக்கலாம். தபால் நிலைய திட்டம் என்பதால் 100% பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு. தனிநபர் கணக்கு மட்டுமின்றி உங்கள் வாழ்க்கை துணையுடன் இணைந்து கூட்டு கணக்கை திறக்கும் போது ரூ.15 லட்சத்தை முதலீடு செய்து அதிகபட்ச வருமானத்தைப் பெற முடியும்.
மாதாந்திர வருமானம்: அதிகபட்சமாக நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து ரூ.15 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டால் மாதாந்திர வருமானமாக 9,250 ரூபாய் வரை பெறலாம்.
இதனால் ஆண்டு வட்டி வருமானம் மட்டும் 1,11,000 ரூபாய் கிடைக்கும். ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் மாதம் உங்களுடைய வட்டி பணம் வந்து தபால் நிலைய அக்கவுண்டில் விழுந்து விடும். அதுவே தனிநபராக இருந்து ஒருமுறை முதலீடாக ரூ.9 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் ஆண்டு வட்டியாக 66,600 ரூபாயை பெறலாம்.
இதனால் மாதாந்திர வருமானம் ரூ. 5,550-ஆக இருக்கும். வழங்கப்படும் மாதாந்திர வருமானம் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் வட்டி மட்டும்தான். அசல் தொகை அப்படியே இருக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வட்டி விகிதம் இருந்தால் அதோடு கணக்கை நீட்டித்து மீண்டும் 5 ஆண்டுகளுக்கு வட்டி வருமானம் பெறலாம். இல்லையேல் உங்களுடைய அசலை திரும்பப் பெறலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications