நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவினை தொடர்ந்து, தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் இன்று முதல் (டிசம்பர் 1) அமலுக்கு வந்துள்ளது.
ஆக இனி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களும் 10,000 ரூபாயினை எடுக்க வேண்டுமானால், ஓடிபியை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
ரூ.10,000 மேல் எடுத்தால் ஓடிபி
சரி விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்? இனி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள், ஏடிஎம்மில் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும்பட்சத்தில் ஒடிபியை பதிவு செய்ய வேண்டியிருக்கும். இந்த ஓடிபியானது வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். எனினும் இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே, இந்த விதிமுறைகள் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
PNB 2.0 ஏடிஎம்களுக்கு மட்டும் இந்த விதிகள்
கடந்த ஏப்ரல் முதல் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய இரு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூன்று வங்கிகளும் இணைந்த பின்னர் PNB 2.0 என்று அழைக்கப்படுகிறது. ஆக PNB 2.0 ஏடிஎம்களில் பணம் எடுப்போருக்கு இந்த ஓடிபி அவசியம் தேவைப்படும். மற்ற ஏடிஎம் மூலம் பணம் எடுப்போருக்கு இந்த விதிகள் பொருந்தாது.
மோசடிகளை தடுக்க நடவடிக்கை
ஏடிஎம் மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்கும் விதமாக பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றையும் பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் ஓடிபி மூலம் எப்படி பணம் எடுப்பது என்பதனையும் தெளிவாக காட்டியுள்ளது.
எஸ்பிஐ-யிலும் இதே வசதி
முன்னதாக எஸ்பிஐ 24 மணி நேரமும் OTP மூலம் பணம் எடுக்கும் வசதியினை அறிவித்தது. இந்த சேவை விரிவாக்கமானது செப்டம்பர் 18 முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இது ஏடிஎம் மோசடிகளை குறைக்க வழிவகுக்கும். அதோடு மக்களின் பணமும் பாதுகாப்பாக இருக்க, இந்த நடைமுறை வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications