சென்னை: இந்தியர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கிறது. படித்து முடித்துவிட்டு வேலைக்கு வரக்கூடிய இளைஞர்களிடமும் இளம் தம்பதிகளும் பெரும்பாலானவர்கள் கூறுவது முதலில் சொந்தமாக ஒரு வீட்டினை வாங்கி விடுங்கள் என்பதுதான்.
ஆனால் தற்போது ரியல் எஸ்டேட் விலை இந்தியாவில் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே சொந்தமாக வீடு வாங்குவது என்பதே பலருக்கும் கனவாக மாறிவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சொந்தமாக வீடு வாங்குவது நல்ல முடிவா அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பது நல்ல முடிவா என்பது குறித்து ஹர்திக் ஜோசி என்ற நிதி ஆலோசகர் விளக்கம் தந்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கும் நிதி ஆலோசகர் ஹர்திக் ஜோசி, சில சமயங்களில் மக்கள் நான் கண்டிப்பாக ஒரு வீடு வாங்க வேண்டும் எனக் கூறுவதை நிறுத்திவிட்டு சொந்தமாக வீடு வாங்குவது உண்மையிலேயே சிறந்ததா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
சொந்த வீடு என்பது நம்முடைய சமூக அந்தஸ்துக்கும் வழிவகுக்கிறது. ஆனால் நிதி ரீதியான தரவுகளை பார்க்கும்போது நம்மிடம் ஒரு கணிசமான தொகை டவுன் பேமெண்டாக செலுத்துவதற்கு இருக்கிறது எனும் போது கண்டிப்பாக சொந்தமாக வீடு வாங்கலாம் என அறிவுரை வழங்குகிறார். சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் ஒரு சாதாரண பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றால் கூட 1.5 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இந்த 1.5 கோடி ரூபாயில் , 30 லட்சம் ரூபாயை நாம் டவுன் பேமெண்டாக செலுத்தி விடுகிறோம் என்றால் மீதமுள்ள 1.2 கோடி ரூபாய்க்கு நாம் வீட்டுக் கடன் வாங்குகிறோம். இந்த வீட்டு கடனுக்கு 9% தொகையை வட்டியாக செலுத்துகிறோம் எனும் போது இந்த வட்டி தொகையோடு சேர்த்து நாம் 20 ஆண்டுகளில் வங்கிக்கு திரும்ப செலுத்தக்கூடிய தொகை 2.5 கோடி ரூபாய். நாம் வாங்கிய கடனை விட 100 சதவீதத்திற்கும் மேல் அதிகமான தொகையை தான் நாம் திரும்ப செலுத்துகிறோம்.
இதே மதிப்பு கொண்ட ஒரு வீட்டில் நம் வாடகைக்கு செல்கிறோம் என்றால் மாதம் 40 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும். மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்தி விட்டு கையில் இருக்கும் 30 லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்யும் போது 20 ஆண்டுகளில் இந்த 30 லட்சம் ரூபாய் பணம் 3 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என அவர் கூறுகிறார்.
எனவே சொந்தமாக வீடு வாங்குவதா அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பதா என்பது தனி நபர்களின் தேவைகளையும் முன்னுரிமைகளையும் பொருத்ததாக இருக்கும். நமது பெயரில் ஒரு சொத்து வேண்டும் கணிசமான தொகை நம்மிடம் டவுன் பேமெண்டாக செலுத்துவதற்கு இருக்கிறது எனும்பட்சத்தில் கண்டிப்பாக வீடு வாங்க செல்லலாம். ஆனால் என்னிடம் பணம் இல்லை நான் பெரும்பாலான தொகைக்கு வங்கி கடன் தான் வாங்க போகிறேன் என்ற சூழலில் இருப்பவர்கள் வாடகை வீட்டில் இருக்கும் முடிவை எடுத்துக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications