சென்னை: மிடில் கிளாஸ் மக்களின் பெரும் கனவாக இருக்கிறது சொந்த வீடு. தன்னுடைய வாழ்நாளில் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை வாங்கி விட வேண்டும் அல்லது கட்டிவிட வேண்டும் என வாழ்நாள் சம்பளத்தையே அர்ப்பணிக்க தயாராக இருக்கின்றனர். இவ்வாறு சொந்த வீடு வாங்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கு வங்கிகள் வழங்கக்கூடிய வீட்டுக் கடன்கள் தான் பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றன .
வங்கியில் வீட்டு கடன் வாங்கி விட்டால் நம் மாதம் தோறும் அந்த தொகையை வட்டியோடு சேர்த்து இஎம்ஐ-ஆக செலுத்தினால் போதும். ஆனால் இந்த வீட்டு கடன் என்பது பல சமயங்களில் பலருக்கும் மிகப்பெரிய ஒரு நிதிச் சுமையாக மாறிவிடுகிறது. இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதற்காகவே வேறு வழியில்லாமல் தொடர்ந்து பதினைந்து முதல் இருபது ஆண்டுக்கான வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கின்றனர். ஆனால் இந்த ஒரு சிம்பிளான டிரிக்கை ஃபாலோ செய்தால் உங்கள் வீட்டுக் கடனுக்கு நீங்கள் வட்டியே செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் முன்வைக்கக்கூடிய ஒரு யோசனை தான் இது. இதை கணக்கீடு செய்து பார்த்தால் உங்களுக்கே நிச்சயம் இது வொர்க் அவுட் ஆகும் என தோன்றும். நீங்கள் வீட்டு கடன் வாங்கும் அதே நாளில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முதலீட்டையும் தொடங்க வேண்டும். கடனை திரும்ப செலுத்தும் காலத்தை அதிகமாக தேர்வு செய்துவிட வேண்டும்.
உதாரணமாக 7.5 சதவீதம் வட்டியோடு நீங்கள் 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அடுத்து 30 ஆண்டுகளுக்கு கடனை நீங்கள் திரும்ப செலுத்தும் காலமாக தேர்வு செய்ய வேண்டும். கடன் திரும்ப செலுத்தும் காலம் அதிகமானால் மாதாந்திர இஎம்ஐ தொகை குறையும். இந்த கடன் தொகைப்படி உங்களின் மாதாந்திர இஎம்ஐ தொகை 20.976 ரூபாய். அடுத்த 30 ஆண்டுகளில் நீங்கள் வட்டியாக செலுத்திய தொகை மட்டுமே 45.51 லட்சம் ரூபாய்.

அதாவது நீங்கள் வாங்கிய கடன் தொகை 30 லட்சம் , வட்டி 7.5% , கடன் திரும்ப செலுத்தும் காலம் 30 ஆண்டுகள், மாதாந்திர இஎம்ஐ 20,976 ரூபாய். நீங்கள் செலுத்தும் மொத்த வட்டியே 45.51 லட்சம் ரூபாய். இந்த கடன் வாங்கிய அதே மாதத்தில் இருந்து நீங்கள் மாதம் 1700 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் உங்களுடைய கடன் செலுத்தும் காலமான அந்த 30 ஆண்டுகளுக்கும் நீங்கள் மாதம் 1700 ரூபாயை முதலீடு செய்தால் 30 ஆண்டுகள் முடிவில் நீங்கள் செய்த முதலீடு 6.12 லட்சம் ரூபாய் உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடிய தகை 52.37 லட்சம்.
அதாவது நீங்கள் செய்த முதலீட்டை விட கூடுதலாக உங்களுக்கு 46 .25 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட நீங்கள் வீட்டு கடனுக்கு செலுத்திய வட்டி தொகை . அதாவது வீட்டுக் கடன் வாங்கும் அதே வேளையில் உடன் ஒரு எஸ்ஐபி திட்டத்தையும் சேர்ந்து தொடங்கிவிட்டோம் என்றால் நாம் செலுத்திய வட்டி தொகை நமக்கு திரும்ப பெற்று தந்துவிடும். எனவே தான் பெரும்பாலான முதலீட்டு ஆலோசகர்கள் வீட்டுக்கடன் வாங்கும் போது அதோடு சேர்த்து ஒரு எஸ்ஐபி முதலீட்டையும் தொடங்கி விடுங்கள் என்று அறிவுரை வழங்குகின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications