நம்பிக்கையை சிதைத்த பங்குச் சந்தை.. எஸ்ஐபி-களை தொடர தயங்கும் முதலீட்டாளர்கள்..!

பங்குச் சந்தையில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்தது என்று நிபுணர்ள் கூறுகின்றனர். சாமானிய மனிதர்களான சில்லரை முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதலீடு செய்யும் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.

இது முதலீடு செய்வதற்கு எளிதான வழியாகவும், ரிஸ்க்கும் குறைவு என்பதால் கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது முதலீட்டாளர்கள் எஸ்ஐபி கணக்குகளை மூடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம்பிக்கையை சிதைத்த பங்குச் சந்தை.. எஸ்ஐபி-களை தொடர தயங்கும்  முதலீட்டாளர்கள்..!

கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தைகள் சரிவு பாதையில் இருப்பது, பங்குகளின் விலை கடுமையான வீழ்ச்சி கண்டு வருவது போன்றவை முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அசைத்தும் பார்த்துள்ளது.

இதன் எதிரொலியாக கடந்த ஜனவரி மாதத்தில் முதலீட்டாளர்கள் கணிசமான எஸ்ஐபி திட்டங்களை நிறுத்தி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்போலியோக்களை மறுசீரமைத்து வருவது, சிறிய எஸ்ஐபிகளை பெரியவைகளாக ஒருங்கிணைக்கின்றனர் அல்லது வெவ்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு மாறி வருகின்றனர்.

இது தவிர மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் வழக்காக மேற்கொள்ளும் வாடிக்கையாளர் எஸ்ஐபிகளை மறு சமநிலைப்படுத்தும் நடவடிக்கையும், எஸ்ஐபி கணக்குகள் நிறுத்தம் அதிகரிப்புக்கு ஒரு காரணம். 2025 ஜனவரி நிலவரப்படி, செயலில் உள்ள எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை10.27 கோடியாக சரிவடைந்துள்ளது. இது முந்தைய டிசம்பர் மாதத்தை காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை 10.32 கோடியாக இருந்தது.

கடந்த ஜனவரியில் புதிய பதிவுகளுக்கு (புதிய எஸ்ஐபி கணக்குகள்) எதிராக நிறுத்தப்பட்ட அல்லது காலாவாதியான எஸ்ஐபிகள் விகிதம் 109 சதவீதமாக உள்ளது. இது 2024 ஏப்ரல் பிறகான அதிகபட்ச அளவாகும். இந்திய பரஸ்பர நிதிகள் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) தகவலின்படி, 2025 ஜனவரி இறுதி நிலவரப்படி மொத்த எஸ்ஐபி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.13.2 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய டிசம்பர் மாத இறுதியில் ரூ.13.6 லட்சம் கோடியாக இருந்தது.

எஸ்ஐபி கணக்குகள் நிறுத்தம் அதிகரித்துள்ளபோதிலும், எஸ்ஐபி வாயிலான வரத்து தொடர்ந்து சிறப்பாகவே உள்ளது. கடந்த ஜனவரியில் எஸ்ஐபி வாயிலான மொத்த முதலீடு ரூ.26.400 கோடியை தொட்டது. இது சென்ற ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் எஸ்ஐபி வாயிலான முதலீடு ரூ.18.838 கோடியாக இருந்தது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+