நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரும், பொதுத்துறை வங்கியுமான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் செயலியான யோனோ மூலம் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும்போது தான், இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையிலும், வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வீட்டுக் கடனுக்கான வட்டி தள்ளுபடி
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தரப்பில் வெளியான அறிக்கையில், ஏற்கனவே 100% செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் எஸ்பிஐ பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, 30 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனிற்கு, வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
முந்தைய சலுகை
இது முன்பு 10 அடிப்படை புள்ளிகளாக வழங்கப்பட்டு வந்தது. அதோடு முன்பு மூன்று கோடி வரையிலாக வீட்டுக்கடனுக்கு 8 மெட்ரோ நகரங்களில் 10 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்கப்பட்டும் வந்தது. இந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இதில் கூடுதலாக யோனோ ஆப் மூலம் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் அளிக்கப்பட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச வட்டி விகிதம்
எஸ்பிஐ வங்கி தற்போது 30 லட்சம் ரூபாய் வரை 6.90 சதவீதம் என குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகும். அதோடு வாடிக்கையாளர்கள் இந்த வீட்டுக்கடன்களுக்கு கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலும் வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகளை வரை சலுகை பெற முடியும்.
தொடர்ந்து சலுகை
எஸ்பிஐ-யின் நிர்வாக அதிகாரி சி.எஸ்.ஷெட்டி இது குறித்து கூறுகையில், எஸ்பிஐயின் மலிவான வீட்டுக் கடன் மூலம், வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவை நனவாக்க முடியும். இப்போது நாடு கோவிட் -19 க்கு பிந்தைய சுற்றுக்கு தயாராகி வருகிறது. நுகர்வோர் தேவை இப்போது மேம்பட்டு வருகிறது. இதனால் எஸ்பிஐ தொடர்ந்து தனது சலுகைகளை வழங்கி வருகின்றது.
கடந்த மாதமே பல சலுகைகள்
எஸ்பிஐ கடந்த மாதமே வங்கி தனது சில்லறை கடன் வாடிக்கையாளர்களுக்காக பல பண்டிகை கால சலுகைகளை அறிவித்தது. இதன் கீழ், யோனோ செயலி மூலம் கார், தங்கம் அல்லது தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு செயலாக்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதோடு வட்டி விகிதங்களிலும் பல சலுகைகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications