நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கே கூட கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ MCLR விகிதத்தினை 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
இந்த விகிதமானது மே 10 முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்பிஐ-யின் 12-வது குறைப்பாகும். இந்த எம்சிஎல்ஆர் விகிதம் குறைந்துள்ளதால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீங்கள் மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் குறைப்பு
இது கொரோனா பாதிப்பு மூலம் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு சற்று நிவாரணம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எம்சிஎல்ஆர் விகிதத்தினை 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ள நிலையில், ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.25% ஆக குறைந்துள்ளது. இது முன்னர் 7.40% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இஎம்ஐ குறையும்
இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பின்னர், 25 லட்சத்துக்கான 30 வருட கடனுக்கு சுமார் 255 ரூபாய் குறையலாம் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியானது ரெபோ விகிதத்தினை குறைக்கா விட்டாலும், எஸ்பிஐ தனது வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன்
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த வட்டி குறைப்பானது மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது எஸ்பிஐ வாடிக்கையாளராக இருப்பவர்களுக்கும் சரி, இனி புதியதாக கடன் வாங்குபவர்களுக்கும் சரி இந்த வட்டி குறைப்பு பயன் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் நடுத்தர மக்களுக்கு இந்த வட்டி குறைப்பு மிக பயன் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி குறையும்
கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில், அதே நேரம் பிக்ஸ்டு டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது. இதனால் டெபாசிட்கள் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புறம் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்தாலும், வங்கியில் டெபாசிட் வைப்புகளுக்கு வட்டி குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications