நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்களை, அக்டோபர் 25, 2021 அன்று ஏலம் விட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒரு வீட்டையோ அல்லது ஏதேனும் சொத்துக்களை வாங்க உங்களுக்கு ஆர்வம் உள்ளது எனில், இது உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.
மேலும் இது சந்தை விலையை விட குறைந்த விலையில் சொத்துக்களை வாங்க நல்ல வாய்ப்பாக அமையும்.
முதலீடு செய்ய நல்ல சான்ஸ்
எஸ்பிஐ-யின் இந்த ஏலத்தில் அனைத்து வகையான வீட்டு வசதி, குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை சொத்துக்கள் என ஏராளமான சொத்துகள் ஏலமிடப்படவுள்ளன. ஆக ஆர்வம் உள்ளவர்கள் எஸ்பிஐ இணையத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மொத்தத்தில் நீங்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவராக இருந்தால், இது சரியான சான்ஸ் எனலாம்.
அடமானக் கடன்
வங்கிகளின் முக்கியமான வேலையே கடன் தருவது தான். எனினும் வங்கிகள் முக்கியத்துவம் கொடுப்பது அடமானக் கடனுக்கு தான். அதிலும் சில கடன் வகைகளை சொத்துகளுக்கு பிணையமாகவும் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் பல்வேறு தேவைகளை முன்னிட்டு இந்தக் கடனை பெறும் வாடிக்கையாளர்கள், வீட்டின் பெயரிலோ அல்லது ஏதாவது சொத்தின் பெயரிலோ பெற்றுக் கொள்ளலாம் .
சொத்துக்கள் ஏலம்
ஆனால் அதனை சரியான நேரத்தில் செலுத்த தவறும்பட்சத்தில், வங்கிகள் சொத்துகளை ஏலத்தில் விடுகின்றன. பொதுவாக இந்த மாதிரியாக ஏலத்தில் விடப்படும் சொத்துகள் சற்று குறைவாகவே இருக்கும். ஆக குறைந்த விலையில் சொத்து வாங்க இது நல்ல வாய்ப்பே. அப்படி கடன் பெறுபவர்களில், உரிய காலகட்டத்தில் கடனை திரும்ப செலுத்தாதவர்களின் சொத்துகளை, வங்கிகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடுகின்றன.
KYC ஆவணங்களை அப்டேட் செய்யுங்கள்
அப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் சொத்துக்களைத் தான் எஸ்பிஐ ஏலமிடவுள்ளது. அதெல்லாம் சரி இந்த ஆன்லைன் ஏலத்தில் கலந்து கொள்ள என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி கலந்து கொள்வது வாருங்கள் பார்க்கலாம்.
நீங்கள் உங்களது KYC ஆவணங்களை சம்பந்தபட்ட கிளையில் கொடுத்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலும் உங்களது டிஜிட்டல் கையொப்பத்தினையும் பெற அணுகலாம். இவ்வாறு நீங்கள் உங்களது KYC ஆவணங்களை சமர்பித்த பிறகு, ஆய்வுசெய்யப்பட்ட பிறகு உங்களுக்கு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு இரண்டும் கிடைக்கும். இது உங்களது மெயில் அடிக்கு ஏலதாரர்கள் மூலம் அனுப்பப்படும்.
முழு விவரங்கள் எங்கே
ஹெல்ப்லைன் எண்- (033-23400020/21/22 / 18001025026 / 011 - 41106131 ) வழங்கியுள்ளது. இது குறித்தான விளம்பரங்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த ஏலம் குறித்தான முழு விவரங்களை https://sbi.co.in/web/sbi-in-the-news/auction-notices/mega-e-auction என்ற இணையபக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் எப்படி லாகின் செய்வது?
எஸ்பிஐயின் இந்த மின் ஏலத்தில் கலந்து கொள்ள பெறப்பட்ட லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டினை கொடுத்து ஏல சமயத்தில் செய்து கொள்ளுங்கள்.
இந்த மின் ஏலத்தில் கலந்து கொள்ள ஆன்லைன் பேமென்ட் அல்லது ஆஃப் லைன் பேமென்ட் என்றாலும் அதற்கான ரசீதினையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். வங்கிகள் உங்கள் ஆவணங்களை சரிபார்த்து உங்களுக்கு தெரியப்படுத்தும். இதன் பிறகு ஏலத்தின் போது நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையின் படி ஏலம் நடக்கும் நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications