நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனியார் துறை வங்கிகளுக்கு சவால் விடும் வகையில், அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது கொரோனா நெருக்கடியில் இருந்து வரும் மக்கள், வங்கிகளில் பணத்தினை எடுக்க வேண்டுமெனில் அதற்கும் கூட பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இவ்வங்கி வாட்சப் வழியாக மொபைல் ஏடிம்எம் சேவையை வழங்கி வருகின்றது. அதனை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
லாக்டவுனால் வீட்டில் அடைந்து கிடக்கும் மக்கள்
இன்னும் நாட்டில் பல இடங்களில் கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டிலேயே அடைந்து கிடைக்க வேண்டிய நிலையே நீடித்து வருகின்றது. இன்னும் சிலர் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருந்து வருகின்றனர். எனினும் தங்களது அத்தியாவசிய தேவைக்கு என பணம் எடுக்க ஏடிஎம்களை அல்லது வங்கியையோ நாடி செல்கின்றனர்.
எஸ்பிஐ அதிரடி திட்டம்
இப்படி ஏடிஎம்களுக்கு செல்லும்போது கூட்டம் கூடுவதால் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இந்த அதிரடியான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் மெசேஜ் போதும்
இதன்படி இனி மக்கள் பணம் எடுக்க ஏடிஎம்-களைத் தேடி செல்லத் தேவையில்லை. மாறாக ஏடிஎம்-களே உங்கள் வீடு தேடி வரும். அதாவது, உங்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென்றால் எஸ்பிஐக்கு வாட்சப்பில் ஜஸ்ட் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும். அல்லது போன் அழைப்பு விடுத்தாலும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே ஏடிஎம் வந்துவிடும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆக அதன் மூலம் நீங்கள் மிக ஈஸியாகவும், பாதுகாப்பாகவும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். இதற்கான அறிவிப்பை எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் அஜய் குமார் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தற்போது லக்னோவில் மட்டும்
தற்போது முதற்கட்டமாக லக்னோவில் மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வீட்டிற்கே ஏடிஎம் சேவைகள் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பாதுகாப்பாக பணம் எடுக்க விரும்பும் மக்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். அதுபோக, வெளியே செல்ல முடியாத முதியோர், நோயால் அவதிப்படுவோருக்கும் மிக உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விதிமுறைகள் என்ன?
எஸ்பிஐ கடந்த ஜூலை 1 முதல் புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விவரங்கள் எஸ்பிஐ தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. மெட்ரோ நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எட்டு முறை இலவசமாக ஏடிஎம்களில் இலவசமாக பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 முறை மற்ற ஏடிஎம்களிலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இதே மெட்ரோ அல்லாத நகரங்களில் 10 முறை இலவசமாக பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இதில் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 5 முறை மற்ற ஏடிஎம்களிலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications