ராகேஷ் ஜுன் ஜுன்வாலா இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் இவர், முழு நேர பங்கு சந்தை முதலீட்டாளர் ஆவார். இவரின் போர்ட்போலியோ பங்குகள் பற்றி தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவர்.
அப்படி ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள மல்டிபேக்கர் பங்கான ஆனந்த ராஜ் பற்றி தான் பார்க்கவிருக்கிறோம்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்றம் கண்டு வரும் ஆனந்த் ராஜ் நிறுவன பங்கின் விலையானது, நடப்பு ஆண்டில் மட்டும் 150% ஏற்றத்தில் காணப்படுகிறது.
நல்ல ஏற்றம்
இந்த மல்டிபேக்கர் பங்கானது 27 ரூபாயில் இருந்து 67.45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பங்கின் விலையானது மூன்று இலக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். ஸ்டாக் மார்கெட் நிபுணர்கள் நிஃப்டி ரியால்டி இன்டெக்ஸ் 10 ஆண்டுகால இடைவெளியை கொடுத்துள்ளது.
முதலீடுகள் ஈர்க்கப்படலாம்
இந்த இடைவெளி நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த பங்கில் FPI மற்றும் FII முதலீடுகளை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொற்று நோய் காலத்திலும் தொடர்ந்து மூன்று காலாண்டுகளில் நிறுவனம் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை இலக்கு
ஆனந்த் ராஜ்ஜின் பங்கு விலையானது 80 ரூபாய் என்ற லெவலான முக்கிய சப்போர்ட் ஆக பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை உடைத்தால் 100 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். இந்த லெவலை உடைத்தால் 155 ரூபாயினை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுவும் ஒரு காரணம்
கொரோனாவின் தாக்கம் இருந்த போதிலும் இந்த நிறுவனம் நல்ல செயல்திறனை காட்டியது. இதனால் நல்ல வருவாய் மற்றும் லாபத்தினை காட்டியது. ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் முதலீடு, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு என பலவும் சேர்ந்து தான் இந்த பங்கின் விலையினை உயர்த்தியது. ஆக பங்கு விலை ஏற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் டெக்னிக்கலாக இந்த பங்கின் விலையானது இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
Disclaimer: மேற்கண்ட இந்த பங்கு பரிந்துரையை பங்கு சந்தை நிபுணர்கள் பரிந்துரை செய்திருந்தாலும், இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் முதலீடு செய்வது நல்லது.