செல்வ மகள், பிபிஎஃப் திட்டங்களுக்கான வட்டி குறைப்பா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், சுகன்யா சம்ரிதி திட்டம் எனப்படும் செல்வ மகள் திட்டம் என பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அரசு அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக செயல்படுத்தி வருகிறது.

லட்சக்கணக்கான மூத்த குடிமக்கள், ஓய்வூதிய தாரர்கள், மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் பணத்தை சிறுக சிறுக சேமிக்க இந்த சேமிப்பு திட்டங்களை தான் பயன்படுத்துகின்றனர். அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் இந்த சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கக்கூடிய வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

செல்வ மகள், பிபிஎஃப் திட்டங்களுக்கான வட்டி குறைப்பா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2025 -26 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2025 - 26 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்படி சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு இது நாள் வரை வழங்கப்பட்டு வந்த 8.2% என்ற வட்டி விகிதம் அப்படியே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ் டெபாசிட் திட்டங்களுக்கு 4 சதவீத வட்டி என்பது வழங்கப்படும். அதேபோல ஒரு ஆண்டுக்கான டைம் டெபாசிட் திட்டத்திற்கு 6.9% வட்டி , இரண்டு ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 7 சதவீத வட்டி, மூன்று ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட்களுக்கு 7 .1 சதவீத வட்டி வழங்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8 .2 சதவீத வட்டி வழங்கப்படும் , தேசிய சேமிப்பு பத்திர திட்டத்திற்கு 7.7 சதவீத வட்டி , கிஷான் விகாஸ் பத்திரம் திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி அப்படியே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கக்கூடிய பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து ஆறாவது காலாண்டாக மாற்றாமலே வைத்திருக்கிறது. இந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் வங்கிகள் அனைத்துமே தாங்கள் வழங்கி வந்த சேமிப்பு திட்டங்களுக்கான வடிவிகிதங்களை குறைத்துவிட்டன . இருந்தாலும் மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கிய வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

இதற்கு முன்னதாக 2023 -24 ஆம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் அரசு இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. அப்போது சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 8 லிருந்து 8.2% ஆகவும் 3 ஆண்டு கால டைம் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 7இல் இருந்து 7.1 சதவீதம் என உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. அடுத்த வட்டி விகித அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+