பெண் குழந்தைகளின் எதிர்கால தேவையை கவனத்தில் கொண்டு பெற்றோர் சிறுக சிறுக அவர்களுக்காக சேமிப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். தமிழ்நாட்டில் இந்த திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் முடிந்துள்ளன. 2015ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி தான் பிரதமர் மோடி இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த 11 ஆண்டுகளில் இந்த திட்டத்தில் எத்தனை பேர் முதலீடு செய்துள்ளார்கள், இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன யாரெல்லாம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் , எவ்வளவு முதலீடு செய்தால் உங்கள் பெண் குழந்தைகளின் படிப்புக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட விரிவான தகவல்களை மத்திய அரசே வெளியிட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் தற்போது இந்த திட்டத்தின் கீழ் 4.53 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்த திட்டத்தில் மட்டும் 3.3 லட்சம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் செயல்படக்கூடிய தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கினை தொடங்கலாம்.
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய தபால் நிலையம் அல்லது வங்கியில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். முதலீடு செய்யக்கூடிய பணத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 8.2 சதவீத வட்டி என்பது வழங்கப்படுகிறது.
கணக்கு முதிர்வு பெற்ற பிறகும் தொடர்ந்து நீங்கள் கணக்கை முடிக்காமல் தொடர்ந்து அதில் பணத்தை வைத்திருந்தால் தபால் நிலைய சேமிப்பு கணக்கிற்கு கிடைக்கும் வட்டி தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். நாட்டின் எந்த பகுதியிலும் இருக்கும் தபால் நிலையம் மற்றும் வங்கியிலும் இந்த கணக்கை மாற்றிக் கொள்ளலாம். பத்து வயதுக்குள் இருக்கக்கூடிய பெண் குழந்தையின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை நாம் முதலீடு செய்து கொண்டே வரவேண்டும்.
அந்த குழந்தைக்கு 15 வயது ஆகும் வரை முதலீட்டை தொடரலாம். 18 வயது ஆன பிறகு அந்த கணக்கினை அந்த பெண் குழந்தை தானாகவே நிர்வகித்துக் கொள்ளலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீட்டிக்கும் வட்டிக்கும் 100% பாதுகாப்பு உண்டு.
இதில் வட்டி என்பது கணக்கிடப்பட்டு கணக்கில் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு விடும். தற்போது இதற்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது. பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான பிறகு அல்லது பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கணக்கில் இருக்கும் பணத்தில் 50 சதவீத தொகையை கல்விக்காக எடுத்துக் கொள்ளலாம். இந்த கணக்கு தொடங்கி 21 ஆண்டுகள் முடியும் போது கணக்கு முதிர்ச்சி அடையும்.
2026 ஆம் ஆண்டில் உங்கள் பெண் குழந்தைக்கு தற்போது ஐந்து வயது ஆகிறது என வைத்து கொள்வோம் நீங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 55,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொண்டால். 21 ஆண்டுகள் முடியும்போது அதாவது 2047 ஆம் ஆண்டில் நீங்கள் செய்த மொத்த முதலீடு 8,25,000 ரூபாய் ஆனால் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் வட்டி மட்டுமே 17,34,000 ரூபாய். ஒட்டுமொத்தமாக உங்கள் கைகளுக்கு 25,59,367 ரூபாய் கிடைக்கும்.இந்தியாவில் வேறு எந்த முதலீட்டு திட்டத்திலும் இவ்வளவு அதிக வட்டி கிடைப்பதில்லை. அது மட்டும் இல்லாமல் இது மத்திய அரசு ஆதரவு தரும் திட்டம் என்பதால் உங்களுடைய பணம் மோசம் போகாது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications