பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆனாலும் அரசின் முதலீட்டு திட்டங்கள் என்றால், அவற்றிற்கு எப்போதும் மக்களிடத்தில் தனி இடம் உண்டு.
அதிலும் குழந்தைகளுக்கான முதலீடு என்றால், அதற்கு வேற வாய்ப்பே இல்லை. முதலுரிமை என்பது அரசாங்க முதலீட்டு திட்டங்களுக்கு தான். எனினும் இன்று நாம் பார்க்கவிருப்பது அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் பற்றி தான்.
மேற்கண்ட இருதிட்டங்களில் எது சிறந்தது? எதில் முதலீடு செய்யலாம்? முதலில் இந்த திட்டங்களில் எப்படி இணைவது? யாருக்கு எந்த திட்டம் பொருந்தும்? வாருங்கள் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கான சேமிப்பு
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான ஒன்று. அதிலும் குழந்தைகளுக்காக சேமிப்பது என்பது மிக அவசியமானது. குறிப்பாக உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் என அவர்களின் முக்கிய கணவுகளுக்காக சேமிக்கும்போது, எது நல்ல லாபம் தரும்? எது உங்களுக்கு உகந்தது. அது எந்த வகையில் சிறந்தது என யோசிக்க வேண்டும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென, கடந்த ஜனவரி 2015ல் கொண்டு வரப்பட்டப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். குழந்தைகளுக்கு முதலீடு எனும் போது, அதில் வேறு ஆப்சனே தேவையில்லை. இந்த சுகன்யா சம்ரிதி திட்டம் தான் சிறந்தது. இந்த திட்டமானது அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது.
எப்படி முதலீடு செய்யலாம்?
அதிலும் பெண் குழந்தைகளுக்கான முதலீடு எனும் போது வேறு ஆப்சனே தேவையில்லை. இதிலேயே முழு முதலீட்டினையும் செய்யலாம். இல்லை வேறு முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில், பெரும் தொகையை சுகன்யா சம்ரிதியிலும், குறைந்த அளவிலான தொகையை பொது வருங்கால வைப்பு நிதியிலும் செய்யலாம். ஏனெனில் சுகன்யா சம்ரிதி திட்டத்தில் 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இதே பொது வருங்கால வைப்பு நிதியில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
எந்த திட்டம் சிறந்தது?
இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது. எனினும் இந்த இரு திட்டங்களுக்கு இடையேயான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. பெரும்பாலான நிபுணர்கள் சுகன்யா சம்ரிதி திட்டம் தான் சிறந்தது என்று கூறுகின்றனர். ஏனெனில் மற்ற திட்டங்களை விட, இதில் வட்டி விகிதம் அதிகம். இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது. எனினும் இந்த இரு திட்டங்களுக்கு இடையேயான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. பெரும்பாலான நிபுணர்கள் சுகன்யா சம்ரிதி திட்டம் தான் சிறந்தது என்று கூறுகின்றனர். ஏனெனில் மற்ற திட்டங்களை விட, இதில் வட்டி விகிதம் அதிகம்.
குழந்தைகளுக்கு ஏற்ற திட்டம்
இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தில் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காத்திற்கு உதவியாக இருக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதியிலும் கொஞ்சம் செய்யலாம்?
எனினும் குழந்தையின் வாழ் நாள் முழுக்க நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க ஒரு நல்ல திட்டம் வேண்டுமெனில், அதற்காக பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இது வாழ் நாள் முழுக்க ஒரு பணப்புழக்கத்தினை அளிக்கிறது. ஆனால் சுகன்யா சம்ரிதி திட்டத்தில் பெரும் தொகை இருக்க வேண்டும். ஏனெனில் ஆரம்ப காலகட்டத்தில் கல்வி, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக பெரும் தொகை தேவைப்படும். ஆக இரண்டிலும் முதலீடு செய்வது நல்ல திட்டம் தான்.
அரசின் SSY கணக்கு?
எனினும் சுகன்யா சம்ரிதி சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளுக்கானது. ஆக இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும். இந்த சேமிப்பு திட்டத்தினை பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம். அதோடு ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் வருடத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இந்த கணக்கினை தொடங்கியதில் இருந்து குறைந்தது 15 வருடத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும். ஆமால் 15 வருட காலத்திற்கு பிறகு முதலீடு செய்ய இயலாது.
வரி சலுகை உண்டா?
சுகன்யா சமிர்தி யோஜனா திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம் பொது வருங்கால வைப்பு நிதியிலும் வரிச்சலுகை உண்டு.
முன் கூட்டியே பணத்தினை திரும்ப பெற முடியுமா?
பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும். ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.
இதே பொது வருங்கால வைப்பு நிதியில் உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
நிறுத்தப்பட்ட கணக்கினை தொடர முடியுமா?
ஒரு வேளை நீங்கள் இடையில் தொடர முடியாமல், மீண்டும் தொடரலாமா என்றால், தொடரலாம். இதற்காக குறிப்பிட்ட தொகை அபாரதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தினை செலுத்தி விட்டு மீண்டும் கணக்கினை தொடரலாம். ஆக குறிப்பிட்ட காலம் செலுத்திவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் முதலீட்டினை தொடர முடியாமல், பின்னர் தொடரலாம் என நினைப்பவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும்.
இதே பிபிஎஃப் கணக்கில் இன் ஆக்டிவ் கணக்கினை, ஆக்டிவாக செயல்படுத்தி கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளிலோ அல்லது அஞ்சலகத்திலோ ஒரு எழுத்துபூர்வமான கோரிக்கையை கொடுக்க வேண்டும். அதோடு செயல்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அரசின் அம்சமான பிபிஎஃப் திட்டம்
இந்தியாரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த வைப்பு நிதி கணக்கினை துவங்க தகுதியானவர் தான். இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒரு கணக்கினை மட்டுமே தொடங்க முடியும். இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.
முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?
இந்த பொது வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளருக்கு நிதி உடனடியாக தேவைப்படாத பட்சத்தில், இந்த வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் தொடர்ந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையிலோ அல்லது அஞ்சலகத்திலோ அதற்கான ஆவணத்தினையும், பார்மினையும் கொடுத்து நீட்டித்துக் கொள்ளலாம். ஆக ஒரு பிளெக்ஸிபிள் முதலீடாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிச்சயம் பிபிஎஃப் சரியான திட்டமாக இருக்கும். இதே பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் எனும் போது சுகன்யா சம்ரிதி திட்டம் சரியானதாக இருக்கும். இதே ஆண் குழந்தை எனில் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் செய்யலாம். ஆக இதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை, தேவைக்கு ஏற்ப நீங்களே தீர்மானம் செய்யலாம்.