இந்தியாவில் தற்போது எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் செய்யப்படக்கூடிய முதலீடுகள் சிறந்தவை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பெஞ்ச் மார்க் குறியீடான நிப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் தந்த லாபத்தை விட குறிப்பிட்ட சில மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக லாபத்தை தந்திருப்பது தெரிய வந்துள்ளது.

நிஃப்டி 50 குறியீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட எஸ்ஐபி முதலீடுகள் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 21.3 சதவீதம் லாபம் தந்துள்ளன. ஆனால் துறை ரீதியான ஃபண்டுகள் மற்றும் ஸ்மால் மற்றும் மிட் கேப் ஃபண்டுகள் 45 % லாபத்தை தந்திருப்பது எக்னாமிக் டைம்ஸ் செய்தியில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்யக்கூடிய தீமேட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகள் கணிசமான லாபத்தை தந்துள்ளன.
ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் குவாண்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் 47.13 சதவீத லாபத்தை தந்துள்ளது. அதேபோல மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் மோதிலால் ஒஸ்வாள் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் 50.17 சதவீத லாபத்தை தந்துள்ளது. செக்டார் ஃபண்டுகளில் நிப்பான் இந்தியா பவர் ஃபண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் 60.09 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. தீமேட்டிக் ஃபண்டுகளில் இன்வெஸ்கோ இந்தியா பிஎஸ்யு ஃபண்ட் 65.03 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது.
இதேபோல பல்வேறு ஸ்மால் கேப் பண்டுகளும் 45 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தையும், மிட் கேப் ஃபண்டுகள் 40 சதவீதத்துக்கு அதிகமான லாபத்தையும் பெற்று தந்துள்ளன. செக்டார் பங்குகள் 55 சதவீதத்திற்கும் அதிகமான லாபங்களை பெற்று தந்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல தீமேட்டிக் ஃபண்டுகள் 50 சதவிகிதத்திற்கும் மேல் லாபத்தை தந்திருப்பது தெரியவந்துள்ளது.
அண்மையில் வெளியான ஒரு தகவலின் படி முதலீட்டாளர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை குறைத்து தங்களது முதலீடுகளை பரவலாக்கி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளில் அதிகபட்ச முதலீடுகள் செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை கடந்த கால வருமானங்களை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய கூடாது என கூறும் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் தீமேட்டீக் ஃபண்டுகள் , ஸ்மால் கேப் உள்ளிட்டவை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications