பொதுமக்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கின்றன. இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் வங்கிகளை விட அதிகமாக இருப்பதால் மக்களும் விரும்பி சென்று அஞ்சல் அலுவலகங்களில் சேமிக்க தொடங்கியுள்ளனர். இவ்வாறு தனிநபர்களுக்கு பயன்படக்கூடிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம்.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம்: இந்த டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்தி, நீங்கள் கணக்கை தொடங்கலாம். அதன்பிறகு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. 5 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

வட்டி எவ்வளவு?: நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 6.9% முதல் 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதாவது 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் என்ற முறையில் முதலீடு செய்யலாம். இதற்கு 6.9%, 7.0 %, 7.1 %, 7.5% என்ற முறையில் வட்டி கிடைக்கிறது.
முதிர்வு காலத்தை எட்டியதும், மீண்டும் இதை புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையின் வட்டி காலாண்டிற்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகையின் மீது அவசரத் தேவைகளுக்கு கடனும் பெறலாம்.
கணக்கு தொடங்கி 6 மாதத்திற்கு பிறகு, முதிர்வு காலம் அடைவதற்கு முன்பே கூட திட்டத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் கால திட்டத்தை தேர்வு செய்வோருக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?: போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஓராண்டு காலத்திற்கு 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 6.9 % வட்டியில் உங்களுக்கு வட்டியாக மட்டும் 70,806 ரூபாய் கிடைக்கும். அதாவது ஓராண்டின் முடிவில் உங்களிடம் 10,70,806 ரூபாய் இருக்கும்.
இதுவே இரண்டு ஆண்டுகளுக்கு என முதலீடு செய்தால் 7% வட்டி கிடைக்கும். எனவே உங்களின் 10 லட்சம் ரூபாய் முதலீடுக்கு 1,48,882 ரூபாய் வட்டி கிடைக்கும். அதுவே மூன்று ஆண்டுகளுக்கு 7.1 % வட்டி கிடைக்கும். அப்படியெனில் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே 2,35,075 ரூபாய் கிடைக்கும்.
அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களின் 10 லட்சம் ரூபாய் முதலீடு 4,49,948 ரூபாய் வட்டியுடன் 14,29,948 ரூபாய் என வளர்ந்திருக்கும். கிடைக்கும் வட்டித்தொகைக்கு வரி விலக்கு பெற முடியும்.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications