பணம் என்றும் நிலையானது அல்ல. அதே நேரம் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வருமானமும் நிலையானது அல்ல என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தற்போது கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பலர் தங்களது வேலையினை இழந்து, அன்றாட தேவைகளுக்கே கூட கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிலர் தங்களது கைகளில் இருக்கும் சொற்ப பணம், நகைகளை அடகு வைத்தும் அல்லது விற்றும் செலவு செய்து வருகின்றனர்.
ஆக இந்த கொரோனா மாட மாளிகையில் இருந்த பலரை அன்றாட தேவைக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளிவிட்டது. இந்த நெருக்கடியான காலம் நமக்கு உணர்த்தி விட்டது, சேமிப்பு நம் வாழ்வில் எவ்வளவு அத்தியாவசியம் என்று.
சேமிப்பின் முக்கியத்துவம்
இதுவே இப்படி எனில் இனி வரும் காலகட்டம் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இருக்கும் பணத்தினை எப்படி சேமிப்பது. சேமிப்புடன் எப்படி வருவாயையும் காண்பது. அப்படியே சேமித்தாலும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ஏதோ ஒன்றில் முதலீடு செய்து விடக்கூடாது. ஆக சரியான பாதுகாப்பான, நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாக இருக்க வேண்டும்.
கவனமுடன் முதலீடு செய்ய வேண்டும்
இப்படி எல்லாவற்றிற்கும் பதில் தரக்கூடிய ஒரே முதலீடு வங்கி சேமிப்பு தான். மக்கள் சேமிப்பு குறித்து யாரும் அதன் அவசியத்தினை உணர்வதில்லை. ஆனால் நிச்சயம் இந்த கொரோனா அதனை உணர்த்தியிருக்கும். அப்படி நாம் கஷ்டப்பட்டு குருவி சேர்ப்பது போல் சேமித்து, அதனை எதில் முதலீடு செய்வது? எந்த வங்கியில் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்பதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
அதிக வட்டி தரும் வங்கிகள்
ஏனெனில் நமக்கு தேவைப்பட்டபோது பணம் வேண்டும். அவசர காலத்திற்கு பணம் வேண்டும். இதெல்லாவற்றுக்கும் உகந்ததொரு திட்டத்தினை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது, வங்கி நிலையான வைப்பு தொகையினை விட, சேமிப்பு கணக்குகளில் வைத்திருக்கும் வைப்பு தொகைக்கு, அதிக வட்டி கொடுக்கும் 10 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பற்றித் தான்.
நெருக்கடியான காலகட்டத்திலும் வட்டி அதிகம்
நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பொருளாதாரத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன. இதன் காரணமாக வங்கிகள் டெபாசிட் தொகைக்கும் வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. எனினும் இத்தகைய காலகட்டத்திலும் அதிக வட்டியை கொடுக்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களில் என்ன விகிதம் என்று பார்க்கலாம்.
பந்தன் வங்கி
பந்தன் வங்கியானது வருடத்திற்கு சேமிப்பு கணக்கிற்கு 4 சதவீதம் முதல் 7.15 சதவீதம் வரை வட்டி விகிதத்தினை வழங்கி வருகின்றது. இந்த வங்கியில் மாத சராசரியான இருப்பு தொகையானது 5000 ரூபாயாகும்.
இதுவே இந்த வங்கியில் பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு 1 வருடத்திற்கு மேல் இரண்டு வருடத்திற்குள் வைத்திருக்கும் இருப்புக்கு 6 சதவீத வட்டியும், இதே 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் 6 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியில் வருடத்திற்கு சேமிப்பு கணக்குக்கு 6 - 7 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் சராசரியாக மாதத்திற்கு 10000 ரூபாயினை குறைந்த பட்ச இருப்பு தொகையாக வைத்திருக்க வேண்டும்.
இந்த வங்கியில் பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு 1 வருடத்திற்கு மேல் இரண்டு வருடத்திற்குள் 7 சதவீத வட்டியும், இதே 2 வருடத்துக்கு மேல் 3 வருடத்திற்குள் 6.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு வட்டியாக 4% - 7% வரை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மால் பைனாஸில் குறைந்த பட்ச இருப்பாக சராசரியாக மாதத்திற்கு 2000 - 5000 ரூபாய் வரையில் வைத்திருக்க வேண்டும்.
இதே இந்த ஸ்மால் பைனான்ஸில் பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு 1 வருடத்திற்கு மேல் இரு வருடத்திற்குள் 6.6%மும், இதே இரண்டு வருடத்திற்கு மேல்- மூன்று வருடத்திற்குள் 6.75%மும் வட்டியாக வழங்கப்படுகிறது.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 4.75% முதல் 6.75% வரை வட்டி வழங்கப்படுகிறது. இங்கு சராசரியாக மாதத்திற்கு 500 முதல் 2,500 ரூபாயினை குறைந்த பட்ச இருப்பு தொகையாக வைத்திருக்க வேண்டும்.
இதே பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு இங்கு 1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 7%மும்
இதே 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 7.25%மும் வட்டியாக வழங்கப்படுகின்றது.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ்
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸில் சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 4% முதல் 6.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. இங்கு குறைந்த பட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதே பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு இங்கு 1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 6.5%மும்
இதே 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 6.05%மும் வழங்கப்படுகிறது.
இந்தஸ்இந்த் வங்கி
இந்தஸ்இந்த் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 4% முதல் 6% வரை வட்டியினை வழங்குகிறது. இங்கு குறைந்த பட்ச இருப்பு தொகை என்பது மாதத்திற்கு சராசரியாக 1500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வைத்திருக்க வேண்டும்.
இதே எஃப்டிக்கு 1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 7%மும்
இதே 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 7%மும் வழங்குகின்றது.
யெஸ் வங்கி
யெஸ் வங்கியானது சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 4% முதல் 6% வரை வட்டியை வழங்குகிறது. இங்கு குறைந்த பட்ச இருப்பு தொகை என்பது மாதத்திற்கு சராசரியாக 10,000 ரூபாயாகும்.
இதே எஃப்டிக்கு 1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 7%
இதேபோல் 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 7%மும் வழங்குகின்றது.
லட்சுமி விலாஸ் வங்கி
லட்சுமி விலாஸ் வங்கியானது சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 3.25% முதல் 5.75% வரை வட்டியை வழங்குகிறது. இந்த வங்கியில் குறைந்த பட்ச இருப்பு தொகை என்பது காலாண்டுக்கு சராசரியாக 500 ரூபாய் முதல் 1,000 ரூபாயாகும்.
இதே இந்த வங்கியில் எஃப்டிக்கு 1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 6.25%மும்
இதேபோல் 2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 6%மும் வழங்கப்படுகின்றது.
டிசிபி வங்கி
டிசிபி வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 3.25% முதல் 5.5% வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கியில் குறைந்த பட்ச இருப்பு தொகை என்பது 5000 ரூபாயாகும்.
இந்த வங்கியில் எஃப்டிக்கு 1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 6.9%மும்
இதே 2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 6.95%மும் வழங்கப்படுகின்றது.
டிபிஎஸ் வங்கி
டிபிஎஸ் வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 3.5% முதல் 5% வரை வட்டி வழங்கப்படுகின்றது. இந்த வங்கியில் குறைந்த பட்ச இருப்பு தொகையானது காலாண்டுக்கு சராசரியாக 25,000 ரூபாயாகும்.
இந்த வங்கியில் எஃப்டிக்கு 1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 4.35%மும்
இதே 2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் வட்டி விகிதம் - 4.35%மும் வழங்கப்படுகின்றது.