உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்.. பெஸ்ட் ஆப்சன் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, வருங்காலத்தில் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அனைத்து பெற்றோரின் எண்ணமாக இருக்கும்.

பலர் சேமிக்க நினைத்தாலும் எப்படி செய்வது? எந்த திட்டத்தில் முதலீடு செய்வது? சிறந்த திட்டங்கள் என்ன? அதில் எப்படி இணைவது? அதில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்று பலருக்கும் தெரிந்திருப்பது இல்லை.

ஆக அப்படி நினைவர்களுக்கான கட்டுரை தான் இது. அந்த வகையில் இன்று 4 சிறந்த முதலீட்டு திட்டங்களை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி.. 2019-20 நிதியாண்டுக்கு 8.5% வட்டி வருமானம் நிச்சயம்!ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி.. 2019-20 நிதியாண்டுக்கு 8.5% வட்டி வருமானம் நிச்சயம்!

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சமிர்தி யோஜனா திட்டம், அவர்களின் பிறப்பு முதல் 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டது அரசின் நல்ல திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்துள்ளது.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் ஆகும். இதற்கான வட்டி விகிதம் வருடத்திற்கு ஜூலை - செப்டம்பர் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இந்த திட்டத்தில் முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை என்பதாலும், நிலையான, கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் உள்ளது.

இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு, வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

 

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம்

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம்

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம், சுத்தமான பாதுகாப்புத் திட்டம் என்றும் அறியப்படுகிறது. ஒருவரின் இழப்பிற்குப் பிறகும் அந்தக் குடும்பம் சந்தோஷமாக, பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் இருக்க, அதுவும் குறைந்த முதலீட்டில் செய்யும் ஒரு சேமிப்பாக இது பார்க்கப்படுகிறது. அதாவது பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே கவரேஜ் கிடைக்கும்.
இன்றைய நாளில் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல அம்சங்களை கொண்ட திட்டங்களை வழங்கி வருகின்றன. ஆக அவற்றில் ஒன்றை, உங்களுக்கு ஏதுவான திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்(SIP)

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்(SIP)

முதலாவது எஸ்ஐபி எனும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானை பற்றித் தான் பார்க்க போகிறோம். மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக செய்யும் முதலீட்டினைத் தான் எஸ்ஐபி என்கிறோம். சிறு துளி பெருவெள்ளம் என்பது நாம் சேமிக்கும் சிறிய தொகை பின்னாளில் பெரிய தொகையாக மாறும். அதோடு மிகச் சிறிய தொகை என்பதால், யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் பண்டுகளில் எஸ்ஐபி முறையில் அனைத்து வகையான சொத்துகளிலும் முதலீடு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பங்கு சந்தை, கடன் சந்தை, தங்கம் வெளிநாட்டு பண்டுகள், பத்திரங்கள் என எதில் வேண்டுமானலும் முதலீடு செய்து கொள்ளலாம். உங்களின் நீண்டகால தேவைக்கு பங்கு சார்ந்த திட்டங்களில் எஸ்பிஐ முறையில் முதலீடு செய்யலாம்.

 

கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்

கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்

டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் பொதுவாக ஒரு பாதுகாப்பான முதலீடு என்று கூறுவார்கள். இது பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகின்ற ஒரு திட்டம். இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இதுல சில வருமான வரி சலுகையும் உண்டு. அதோடு இந்த ஃபண்டுகளாக ஒரு வருடத்திற்கு மேல் வைத்திருந்தால் மூலதன ஆதாய வரி கிடையாது. இந்த திட்டத்தினை பொறுத்தவரை எத்தனை நாட்களுக்கு இந்த ஃபண்டை வைத்திருக்கிறோமோ? அவ்வளவு வருமானம் இருக்கும். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல திட்டமே.

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் வங்கி டெபாசிட் மாதிரி கட்டாயம் இத்தனை வருடங்கள் வைத்திருந்தால் தான் வருமானம் என்பது இதில் கிடையாது. அது எல்லாவற்றையும் விட பங்கு சார்ந்த திட்டங்கள் போல, இதில் என்ஏவியும் அதிகம் மாற்றம் காணாது. இந்த ஃபண்டுகளில் நாம் முதலீடு செய்யுற காலத்தினை வைத்து இதனை மூன்று வகையா பிரிச்சிக்கலாம். ஒன்று ஷார்ட் டெர்ம் டெப்ட் ஃபண்ட், மீடியம் டெர்ம், லாங் டெர்ம் ஃபண்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது.

ஆக நாம முதலீடு செய்யணும் நினைக்கும்போது இதில் தான் செய்யப்போறோம். இவ்வளவு காலத்துக்குள்ள, நம்ம பணம் நமக்கு வேணும் என்று தீர்மானித்து இதில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு வரும் காலத்துல நீங்க ஒரு வீடு வாங்கவோ அல்லது திருமணத்திற்காக சேமித்து வைக்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஏற்ற திட்டம் இது தான். ஏனெனில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பிக்ஸ்டு டெபாசிட், பாண்டுகள், அரசு கடன் பத்திரங்கள் இம்மாதிரியானவற்றில் தான் முதலீடு செய்வார்கள். பொதுவா நாங்க எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பல, நான் இப்பதான் புதிதாக முதலீடு செய்யப்போறேன் என்பவர்களுக்கு இது ஏற்ற திட்டம். வயதானவர்களுக்கும் இது ஏற்றது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top investment schemes for your child’s future

Investment updates.. Top investment schemes for your child’s futures. Please check here the details
Story first published: Thursday, December 10, 2020, 21:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X