கூட்டு வட்டியில் கொட்டும் லாபம்.. உங்கள் பர்ஸ் நிரம்பி வழியும்.. எப்படி சாத்தியம்னு தெரிஞ்சிக்கோங்க!

சென்னை: ஒரு சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிப்பது மந்திரம் போல் தோன்றும். ஆனால் அது உண்மையில் சாத்தியம், குறிப்பாக நீங்கள் கூட்டு வட்டியைப் பயன்படுத்தினால்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டி முறையை "உலகின் எட்டாவது அதிசயம்" என்று குறிப்பிடுகிறார். கூட்டு வட்டி என்பது உலகின் மிகவும் சக்திவாய்ந்த சக்தி. அதைப் புரிந்துகொள்பவர் , சம்பாதிக்கிறார், அதைச் செய்யாதவர் பிறருக்கு வட்டி செலுத்துகிறார்" என்று கூறியுள்ளார்.

கூட்டு வட்டியில் கொட்டும் லாபம்.. உங்கள் பர்ஸ் நிரம்பி வழியும்.. எப்படி சாத்தியம்னு தெரிஞ்சிக்கோங்க!

கூட்டு வட்டி மூலம் 25 ஆண்டுகளுக்குள் ரூ.1 லட்சத்தை, ரூ.1.5 கோடியாக மாற்ற முடியும். இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் புரிந்து கொள்ள, ஆகஸ்ட் 1998-இல் தொடங்கப்பட்ட ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டைக் கவனியுங்கள். ஃபண்ட் தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 21.72 சதவீத வருமானத்தை அளித்து வருகிறது. இறுதியில் 25 வருடங்கள் மற்றும் ஏழு மாத கால இடைவெளியில், தங்கள் பணத்தை முதலீடு செய்தவர்கள் இப்போது பன்மடங்கு லாபத்தைப் பார்த்திருக்கலாம்.

கூட்டு வட்டி என்றால் என்ன?: கூட்டு வட்டி என்பது உங்கள் அசல் முதலீடு மற்றும் நீங்கள் ஏற்கனவே சம்பாதித்த வட்டி ஆகிய இரண்டிற்கும் வட்டி பெறுவீர்கள். ஒவ்வொரு ஆண்டும், உங்கள் அசல் முதலீட்டில் வட்டி சேர்க்கப்படும், எனவே அடுத்த ஆண்டு அந்த பெரிய தொகைக்கு வட்டி கிடைக்கும். இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் தொடர்கிறது, காலப்போக்கில் உங்கள் பணம் வேகமாக வளர உதவுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், நீங்கள் முதலீடு செய்த அசல் தொகையுடன் உங்கள் வட்டியும் சேர்க்கப்படும். பிறகு, வட்டி உட்பட மொத்தத் தொகைக்கு வட்டியைப் பெறுவீர்கள். இது உங்கள் முதலீட்டைக் காலப்போக்கில் அதிகரிக்க உதவுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

5 சதவிகித வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்கும் சேமிப்புக் கணக்கில் நீங்கள்
ரூ. 10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல் வருட முடிவில், நீங்கள் ரூ. 500 வட்டியைப் பெறுவீர்கள். உங்கள் முதலீட்டின் மொத்த மதிப்பை ரூ.10,500 ஆகக் கொண்டு, அடுத்த வருடத்தின் முதலீட்டுத் தொகையாக இது மாறுகிறது. இப்போது, இரண்டாவது ஆண்டில், அந்த ரூ. 10,500 புதிய அடிப்படைத் தொகையாக இருக்கும். மேலும் அந்தத் தொகைக்கு நீங்கள் 5 சதவிகித வட்டியைப் பெறுவீர்கள். அதாவது முதலீட்டின் இரண்டாவது வருட முடிவில் ரூ. 525க்கு சமமான வட்டியைப் பெறுவீர்கள். எனவே, இரண்டாம் ஆண்டு முடிவில், உங்கள் முதலீடு ரூ. 11,025 ஆக இருக்கும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் வட்டி பெறும் போது, அது உங்கள் தொடக்க முதலீட்டில் சேர்க்கப்படும். பின்னர், அடுத்த ஆண்டிற்கு நீங்கள் வட்டியுடன் சேர்த்த பணம், முதலீடாக இருக்கும். எனவே தொடக்க முதலீட்டுத் தொகை மற்றும் நீங்கள் ஏற்கனவே சம்பாதித்த வட்டி ஆகிய இரண்டிற்கும் வட்டியைப் பெறுவீர்கள். இது தொடர்ந்து ஒரு சுழற்சி போல நடக்கும். மேலும் உங்கள் பணம் காலப்போக்கில் நல்ல வளர்ச்சியை அடைய உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+