டெல்லி: CBDT எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அண்மையில் சிஐஐ (CII )எனப்படும் விலை பணவீக்க குறியீட்டினை வெளியிட்டுள்ளது. நாம் நீண்ட காலமாக கொண்டிருக்கும் சொத்து, பங்கு உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் போது நமக்கு விதிக்கப்படும் மூலதன ஆதாய வரியை குறைப்பதற்கான ஒரு குறியீடு தான் விலை பண வீக்க குறியீடு.
இதன் முக்கியத்துவம் என்ன?, இதைப் பற்றி ஏன் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நேரடி வரிகள் வாரியம் 2024- 25ஆம் நிதியாண்டுக்கான விலை பணவீக்க குறியீடு குறியீட்டை 363 என நிர்ணயம் செய்துள்ளது. பொதுவாக நாம் சில பொருட்களை வாங்கும் போது ஒரு விலை இருக்கும் அதனை விற்கும் போது வேறொரு விலை இருக்கும். சில பொருட்களின் விலை குறையும் சில பொருட்களின் விலை உயரும்.
உதாரணமாக இரு சக்கர வாகனம் நாம் வாங்கும் போது 1 லட்சம் ரூபாய் என்றால் அதனை விற்கும் போது தேய்மானம் போக நாம் பயன்படுத்திய ஆண்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு 1 லட்சத்திற்கும் கீழ் தான் விற்பனையாகும்.
இதுவே நாம் ஒரு நிலத்தை விற்பனை செய்கிறோம் என்றால், கண்டிப்பாக நாம் வாங்கியதை விட அதிக விலைக்கு தான் விற்பனையாகும்.
நாம் வாங்கிய ஒரு சொத்தினை குறிப்பிட்ட காலத்திற்கு வைத்து கொண்டு பின்னர் அதிக விலைக்கு விற்கும் போது, அரசு நமக்கு குறிப்பிட்ட தொகையை வரியாக விதிக்கும். இது நீண்ட கால மூலதன ஆதாய வரி என அழைக்கப்படுகிறது.
இந்த வரியை கணக்கீடு செய்வதற்கு உதவக் கூடிய ஒரு குறியீடு தான் விலை பணவீக்க குறியீடு. ஆண்டுதோறும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த குறியீட்டின் அளவை வெளியிடும். இந்த குறியீடு இல்லையெனில் நாம் பெரும் தொகையை அரசுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக செலுத்த வேண்டி இருக்கும்.
உதாரணம்: மணி என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு நிலத்தை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். 2009ஆம் ஆண்டு இதனை 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். இதில் அவருக்கு கிடைத்த மூலதன ஆதாயம் 15 லட்சம் ரூபாய் ஆகும். இதில் 15 லட்சம் ரூபாய்க்கும் அரசு வரி கணக்கிடாது. இந்த இடத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பணவீக்க குறியீட்டை கொண்டு இதனை சமன் செய்ய வேண்டும்.
நிலம் வாங்கப்பட்ட ஆண்டில் விலை பணவீக்க குறியீடு 300.
நிலம் விற்கப்பட்ட ஆண்டில் விலை பணவீக்க குறியீடு 363.
எனில் இந்த சொத்துக்கு விலை பணவீக்க குறியீடு 363/300=1.21
இப்போது பணவீக்க குறியீட்டின் படி சொத்தின் மதிப்பு = 20,00,000 * 1.21 = 24,20,000
நீண்ட கால மூலதன ஆதாயம் = 35,00,000 - 24,20,000 = 10,80,000.
எனவே இந்த சொத்தில் 10.80 லட்சம் ரூபாய்க்கு தான் மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இதில் அரசு விதிகளின் படி 10% அல்லது 20% என எது பொருந்துமோ அந்த விகிதத்தில் வரி வசூல் செய்யும்.
விலை பணவீக்க குறியீடு இல்லையெனில் மணி 15 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டி இருக்கும், ஆனால் தற்போது 10.80 லட்சம் ரூபாய் என குறைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications