சென்னை: பணத்தை சேமிப்பு கணக்கிலேயே வைக்காமல் சரியான முதலீட்டுக் கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு முதலீடு செய்யக்கூடிய பலருக்கும் பல்வேறு இலக்குகள் இருக்கும் .
முதலீடு: குழந்தையின் உயர்கல்வி, சொந்தமாக வீடு வாங்குவது ,சொந்தமாக ஒரு வாகனம் வாங்குவது , ஓய்வு காலம் என பல இலக்குகளைக் கொண்டுதான் நாம் பணத்தை சேமிக்கிறோம். இவ்வாறு பணத்தை சேமிக்கும் போது நீங்கள் செய்த முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறும் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். அது எப்படி என தற்போது பார்க்கலாம் விதிமுறை.

எப்போது இரட்டிப்பாகும்: Rule of 72 என ஆங்கிலத்தில் இதனை அழைக்கிறார்கள் . அதாவது எந்த ஒரு முதலீட்டிலும் நீங்கள் செய்த முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக மாறும் , அதாவது நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருக்கிறீர்கள் என்றால் அது எப்பொழுது 2 லட்சமாக மாறும் என்பதை கணக்கிட உதவுவது தான் ரூல் ஆஃப் 72.
விதி 72: உதாரணமாக நாம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம் என்றால் உங்களுக்கு ஆண்டுக்கு அது 8 சதவீத லாபம் தருகிறது எனும் போது 72/8 என வகுக்க வேண்டும். அப்பொழுது நமக்கு கிடைக்கும் விடை 9. உங்களுடைய 1 லட்சம் ரூபாய் முதலீடு 9 ஆண்டுகளில் 2 லட்சமாக மாறும். முதலீடு எவ்வளவு வட்டியை எனக்கு தருகிறது என தீர்க்கமாக உங்களுக்கு தெரிகிறது எனும்போது மிக எளிதாக இந்த ரூல் ஆஃப் 72 ஐ பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஃபிக்சட் டெபாசிட்: பல்வேறு வங்கிகளும் நமக்கு எஃப்டி எனப்படும் நிலையான வைப்பு தொகை திட்டங்களை வழங்குகின்றன, குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இருந்து அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நாம் இந்த எஃப்டி திட்டங்களில் முதலீடு செய்ய முடிகிறது. குறைந்தபட்சம் 3 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு எஃப்டி திட்டத்தில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் அது 7 சதவீதம் வட்டி தருகிறது என்றால் உங்களிடம் இந்த ஒரு லட்சம் ரூபாய் முதலீடு 10.28 ஆண்டுகளில் (10 ஆண்டுகள் 3 மாதம் 11 நாட்கள்) உங்களுடைய பணம் 2 லட்சமாக உயர்ந்திருக்கும்.
பிபிஎஃப்: பிபிஎஃப் திட்டங்களுக்கு அரசு 7.1% வட்டி வழங்குகிறது என்றால் 72/ 7.1 என கணக்கிட்டால் 10.17 ஆண்டுகளில் (10 ஆண்டுகள் 2 மாதங்கள்) உங்களுடைய முதலீடு 2 லட்சமாக வளர்ந்திருக்கும். நம்முடைய முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாக வளரும் என்பதை தெரிந்து வைத்து கொள்வது நம் இலக்குகளை சரியாக திட்டமிடவும் அதற்கேற்ப முதலீட்டை அதிகரிக்கவும் நமக்கு உதவும்.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications