இன்றைய காலகட்டத்தில் நமக்கெல்லாம் அவசரத் தேவைக்கு பணம் தேவை எனில், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பர்சனல் லோன் எனப்படும், தனிநபர் கடன்கள் தான்.
ஏனெனில் இந்த தனிநபர் கடன்களுக்கு செக்யூரிட்டி தேவையில்லை. அதோடு மற்ற கடன்களை காட்டிலும் இதற்கு வட்டி சற்று அதிகம் என்றாலும், பிணையமாக எதுவும் தேவையில்லை என்பதால், இதனை மிக அதிகமாக மக்கள் விரும்புகின்றனர்.
தங்கம், சொத்து, மியூச்சுவல் ஃபண்டு, பிக்ஸட் டெபாசிட், கார் உள்ளிட்ட பல முதலீடுகள் போன்றவற்றை பயன்படுத்தி கடன் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இவை இல்லாத பட்சத்தில் மக்கள் தனிநபர் கடன்களை பயன்படுத்தலாம்.
எஸ்பிஐ தான் பெஸ்ட்
ஆக இப்படி நீங்கள் தனிநபர் கடன்களை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அது இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிறந்த ஆப்சனாக இருக்கும். ஏனெனில் மற்ற தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் வட்டி விகிதம் குறைவு. அதோடு மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது செயல்பாட்டுக் கட்டணமும் குறைவு.
செயல்பாட்டுக் கட்டணம் & வட்டி விகிதம் குறைவு
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் செயல்பாட்டுக் கட்டணம் 1.50% கீழ் குறைவாகவே உள்ளது. இதுவே மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியில் செயல்பாட்டுக் கட்டணம் 2.5% ஆகும். இது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவினை விட 1 சதவீதம் அதிகம் உள்ளது. தனிநபர் கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதங்களும் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன.
வட்டி எவ்வளவு?
இது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, மற்ற வங்கிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 3 சதவீதத்திற்கும் மேலாக இருக்கலாம். இதே தனியார் வங்கிகளில் 4 சதவீதத்திற்கு மேலாக வசூலிக்கப்படுகிறது.
கணிசமான தொகை மிச்சம்
அதோடு மற்ற கடன் விண்ணப்பங்களை சரிபார்க்க வங்கிகள் அவகாசம் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் வங்கிகளில் தனிநபர் கடனை விரைவில் கொடுக்கின்றன. அதோடு பெரியளவில் நீங்கள் பர்சனல் லோன் வாங்கும் போது, உங்களுக்கு தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது வட்டி விகிதம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணத்தில் கணிசமான தொகை மிச்சமாகும்.
இரண்டாம் பட்சமான எடுத்துக் கொள்ளுங்கள்
எனினும் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். ஆனால் மேற்கண்ட சலுகைகளை பெற சற்று காத்திருப்பதில் தப்பேதும் இல்லையே. ஆனால் நிபுணர்கள் பர்சனல் லோனை இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஏனெனில் மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது, இதில் வட்டி விகிதம் அதிகம். அதாவது கிரெடிட் கார்டு கடன்களுக்கு அடுத்த வட்டி விகிதம், இந்த பர்சனல் கடன்களுக்கு தான் அதிகம்.
எஸ்பிஐ சிறந்த ஆப்சன்
எளிதாகக் கூறவேண்டுமானால், தனிநபர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வங்கிகள் அல்லது வங்கியில்லா நிதி நிறுவனங்களில் வாங்கும் பாதுகாப்பற்ற கடன். ஆக இந்த தனிநபர் கடன் வருவாய் மட்டம், கிரெடிட் ஸ்கோர், வேலை மற்றும் திருப்பி செலுத்தும் திறன் போன்ற அடிப்படை காரணிகளை வைத்து வழங்கப்படுகிறது. ஆக இதற்கு வட்டி விகிதம் அதிகம் என்பதால் முடிந்தமட்டில் வேறு வகையான கடனை நாடலாம். அப்படி வாங்கியே ஆக வேண்டும் எனும் பட்சத்தில் எஸ்பிஐ சிறந்த ஆப்சனாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications