கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கி அந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. ஆனால் இந்த வீடு வாங்கும் முடிவை எடுப்பது அத்தனை எளிதானது அல்ல. நாம் வசிக்கும் நகரத்தில் வாங்குவதா அல்லது சொந்த கிராமத்தில் வாங்குவதா என பல குழப்பங்கள் இருக்கும்.
ஆனால் இங்கே ஒரு நபர் நகரம், கிராமம் என பல இடங்களிலும் சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 32 வயதான ரவி ஷர்மா ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் இவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியா முழுவதும் இவருக்கு சொந்தமாக 23 வீடுகள் இருக்கின்றன. சிட்னியில் இரண்டு வீடுகளும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் மொத்தம் 21 வீடுகளும் என தனக்கு சொந்தமாக 23 வீடுகள் இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் அப்படி இருந்தும் தான் தொடர்ந்து வாடகை வீட்டில் தான் வசிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒரு பேட்டி ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டிருக்கும் அவர் என்னிடம் இருபதுக்கும் அதிகமான சொந்த வீடுகள் இருக்கின்றன. ஆனால் நான் இன்னமும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன் என கூறியிருக்கிறார். சிட்னியில் மூன்று படுக்கையறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நான் வாடகைக்கு வசிக்கிறேன். வாரத்திற்கு 1420 டாலர்களை நான் வாடகையாக செலுத்துகிறேன் என கூறியிருக்கிறார்.
இதனை Rentvesting Startegy என அழைக்கின்றனர். அதாவது நாம் வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றுக்காக ஒரு இடத்தில் தங்கி இருக்கிறோம் ஆனால் அங்கே வீடு, ரியல் எஸ்டேட் விலை அதிகமாக இருக்கிறது. நாம் இங்கேதான் இருக்க போகிறோம் என்பதற்காக இந்த இடத்தில் வீடு அல்லது சொத்து வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களில் குறைந்த விலையில் வீடு, நிலம் உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டு , தான் வசிக்கக்கூடிய ஊரில் வாடகைக்கு இருப்பது நல்ல யோசனை என இவர் கூறுகிறார்.
21 வயதில் முதன்முறையாக டப்போ என்ற இடத்தில் 1,90,000 டாலர்களை கொடுத்து ஒரு மூன்று படுக்கையறை கொண்ட வீட்டினை வாங்கி இருக்கார். அதனை வாடகைக்க விடுந்து அதில் வந்த வருமானத்தையும் தன்னுடைய வருமானத்திலும் சேர்த்து வைத்து ஆஸ்திரேலியாவும் பல்வேறு நகரங்களிலும் நல்ல வாடகை வருமானம் தரக்கூடிய அதே வேளையில் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய பகுதிகளாக தேர்வு செய்து வீடுகளை வாங்கி வாடகைக்கு விடுத்திருக்கிறார்.
இதுவே சிட்னியில் முதலிலேயே நான் ஒரு வீட்டினை வாங்கி இருந்தால் என்னுடைய இத்தனை ஆண்டுகால வருமானத்தையும் அதற்காக கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது எனக்கு சொந்தமாக இருபது வீடு இருக்கிறது என கூறுகிறார். அவருடைய இந்த ஐடியா பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. ஒரு வீட்டை வாங்கி நம் பணம் முழுவதையும் அங்கேயே குவித்துவிடாமல் பல இடங்களில் பன்முகத்தன்மை படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை தொடர்ந்து உயர போகிறதா? திருமணத்திற்கு நகை வாங்க வேண்டியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் ஏன் தங்கம் விலை உயர்கிறது? - உலக தங்க கவுன்சில் தலைவர் கொடுக்கும் விளக்கம்

பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

வாழ்க்கையை என்ஜாய் பண்ண சீக்கிரம் ரிடையர்மெண்ட்? மாதம் ரூ.75,000 டூ 1 லட்சம் பென்ஷன் வேண்டுமா?

ரூ.1 கோடி இருந்தால் வேலையை விட்டு விடலாமா? இந்தியாவில் இது ஓய்வு காலத்திற்கு போதுமா?

வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?

தங்கத்தில் முதலீடு செய்யப் போறீங்களா ? இவ்வளவு செஞ்சீங்கன்னா போதும் : ரே டேலியோ கூறும் கணக்கு

தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?



Click it and Unblock the Notifications