தனியார் துறையை சேர்ந்த யெஸ் வங்கியானது சில சேவைகளுக்கு கட்டண அதிகரிப்பினை செய்துள்ளது.
அது சரி எதற்கெல்லாம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது? எவ்வளவு கட்டணம் அதிகரித்துள்ளது? எவ்வளவு அபராதம்? எதற்கெல்லாம்? வாருங்கள் பார்க்கலாம்.
தனியார் துறையை சேர்ந்த வங்கியான யெஸ் வங்கி, வைப்பு நிதிகளை முன் கூட்டியே பெறுதல் என பலவற்றிற்கும் அபராத தொகையினை அதிகரித்துள்ளது.
எதற்கு அபராதம் அதிகரிப்பு
வங்கி இணையதள அறிக்கையின் படி, புதிய அபராத கட்டணங்களானது ஆகஸ்ட் 8, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது.
குறிப்பாக மிக குறுகிய கால டெபாசிட்கள் அல்லது 181 நாட்களுக்குள்ளான டெபாசிட் தொகையை முன் கூட்டியே பெற்றால், அதற்கு அபராதம் 0.25% ல் இருந்து 0.50% ஆக அதிகரித்துள்ளது.
182 நாட்களுக்கு மேல்
அதேபோல 182 நாட்களுக்கு மேலாக டெபாசிட்களுக்கு முன் கூட்டியே திரும்ப பெற்றால் அதற்கு கட்டணமாக 0.50%ல் இருந்து, 0.75% ஆக அதிகரித்துள்ளது. எனினும் மூத்த குடிமக்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.
யாருக்கெல்லாம் பொருந்தும்
யெஸ் வங்கி இணையதளத்தின் படி, 5 கோடி ரூபாய்க்கு குறைவான டெபாசிட்டுகள் முன் பதிவு மற்றும் புதுபித்தல்களுக்கும் முன் கூட்டியே திரும்ப பெறுதலுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த முன் கூட்டியே திரும்ப பெரும் கட்டணமானது அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனி நபர்கள், தனி நபர் அல்லாத வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
வட்டி விகிதம்
யெஸ் வங்கியில் ஜூன் 18, 2022 அன்று கடைசியாக வைப்பு நிதிகளுக்காக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. இதன் படி பொது மக்களுக்கு வட்டி விகிதம் 3.25% முதல் 6.50% வரையிலும், 3.75% முதல் 7.25% வரையிலும் கொடுக்கப்படுகிறது. டெபாசிட் காலமும் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலும் உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications