செயல்படாத மற்றும் பரிவர்த்தனைகள் நிகழாத EPFO கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், அதில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கும் EPFO புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட காலம் செயல்படாத கணக்குகளில் இருந்து முறையற்ற வகையில் பணம் பெறப்படுவதை தடுக்க இந்த புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படுவதாக EPFO தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2ஆம் தேதி EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பரிவர்த்தனைகள் நிகழாத (transaction less) மற்றும் செயல்படாத கணக்குகளை (inoperative and inactive) மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் மோசடி அல்லது அடையாளத் திருட்டு போன்றவை நிகழாத வகையில் செயல்பட வேண்டும் என கள அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளில் எந்த பரிவர்த்தனையும் அதாவது காலமுறை வட்டி வரவு தவிர வேறு எந்த டெபிட் அல்லது கிரெடிட் நடக்காத கணக்குகள் பரிவர்த்தனை இல்லாத கணக்குகள் என வரையறுக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் நடக்காததால் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளை செயலற்ற கணக்குகளாக கருதலாம் என்றும் EPFO கூறுகிறது.
தற்போது திருத்தப்பட்ட வரையறையின்படி ஒரு கணக்கு 58 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது ஓய்வு பெற்ற 55 வயதுக்கு பின் 36 மாதங்களுக்குப் பிறகு செயல்படாத கணக்காக இருக்கும். திருத்தப்பட்ட வரையறைபடி உறுப்பினர் 58 வயதை அடைந்த பிறகு ஒரு கணக்கு செயல் இழந்ததாக வகைப்படுத்தப்படும்.
எனவே தற்போது செயல்படாத கணக்குகளை Unblock செய்வதற்கு புதிய நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கணக்கு உரிமையாளர் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ இதற்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அந்த EPFO கணக்கில் UAN இல்லை என்றால் முதலில் அந்த கணக்கிற்கு UAN எண்ணை உருவாக்க வேண்டும். இதனை கள அலுவலர்கள் மட்டுமே செய்ய முடியும். செயல்படாத அல்லது பரிவர்த்தனை நிகழாத கணக்குகளுக்கு , கணக்கு உரிமையாளர் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய சரிபார்ப்புகளை முடித்துவிட்டு அலுவலர்கள் UAN எண்ணை உருவாக்குவார்கள். இதனை அடுத்து பான், ஆதார், வங்கி கணக்கு எண் ஆகியவைகொண்டு கேஒய்சி செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகு கணக்கு உரிமையாளர் தன்னுடைய கணக்கை unblock செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும். கணக்கு உரிமையாளரால் நேரடியாக அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை எனும் போது ஆன்லைனில் இதற்கான கோரிக்கையை முன் வைத்தால் அதிகாரியே நேரடியாக வீட்டிற்கு வந்து கணக்கினை சரி பார்ப்பார்.
பரிவர்த்தனை நிகழாத கணக்குகளில் சரிபார்ப்பு நடைமுறைகளை செய்வதற்கு அதிகாரிகள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து அந்த உறுப்பினர்களின் தகவல்களை சரி பார்க்க வேண்டும் என EPFO கூறியுள்ளது. அந்த குறிப்பிட்ட நபர் பணி செய்த நிறுவனத்தில் தற்போது ஆக்டிவாக இருக்கக்கூடிய UAN கணக்கு உரிமையாளர்களுக்கு தகவல்களை அனுப்பி உறுதி செய்வது என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே UAN இணைக்கப்பட்டு கேஒய்சி நடைமுறைகள் முடிக்கப்பட்ட கணக்குகளுக்கு Unblock கோரிக்கையை ஆன்லைன் வாயிலாகவே முன் வைக்கலாம். கணக்கு உரிமையாளர் இறக்கும்பட்சத்தில் அவர்களின் நாமினி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கில் இருக்கும் பணத்தை கோரலாம்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications