கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பெரும்பாலான அத்தியாவசியம் தவிர அனைத்தும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் லாக்டவுன் காரணத்தினால் வண்டிகள் செல்லாததால், பெரும்பாலானவர்கள் தங்களது வாகனத்திற்கான இன்சூரன்ஸினை புதுபிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இந்த லாக்டவுன் காரணத்தினால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால், கடந்த 60 நாட்களில் குறைவான விபத்துகள் தான் உள்ளதாகவும், இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கணிசமான அளவே இன்சூரன்ஸ் க்ளைம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லாக்டவுனினால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் வகையில், அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம், அது தவிர இன்னும் சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிகள் புதுபிப்பதில் 10-15% தள்ளுபடிகள் அளித்துள்ளன. இது மூன்றாம் தரப்பு பாலிசிகளுக்கும் சில தள்ளுபடிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதே பாரதி ஆக்ஸா நிறுவனம் (Bharti AXA General Insurance Company Ltd) தங்களுடன் நீண்டகாலமாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு சில தள்ளுபடியை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய நிலவரப்படி, அனைத்து காப்பீட்டாளர்களும் இந்த குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்கவில்லை.
கொரோனாவால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தொழில் வளர்ச்சி 25 -30% வீழ்ச்சியினை இந்த துறை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் புதிய காப்பீடுகள் விற்பனை குறைந்துள்ளது. மேலும் லாக்டவுன் காரணமாக இன்சூரன்ஸ் புதுபித்தலும் குறைவு என்று பாலிசி பஜார்.காமின் மோட்டார் வணிகத் தலைவர் சஜ்ஜா பிரவீன் சவுத்ரி கூறியுள்ளார்.
இதே டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆதர்ஷ் அகர்வால் மோட்டாருக்கான இன்சூரன்ஸ் புதுபித்தல் விகிதம் குறைந்துவிட்டது. மேலும் உரிமைகோரல் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. ஆனால் பிரீமியங்களைக் குறைக்க நிறுவனம் திட்டமிடவில்லை. ஏனெனில் விரைவில் க்ளைம்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காப்பீட்டாளர்கள் எந்த அளவுக்கு தள்ளுபடியை வழங்குவார்கள் என்பது அவர்களின் தயாரிப்புகளை பொறுத்தது. எனினும் பொதுவாக வாகன பிரீமியங்கள் 10% குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோங்க கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது சற்று ஆறுதலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications