கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பெரும்பாலான அத்தியாவசியம் தவிர அனைத்தும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் லாக்டவுன் காரணத்தினால் வண்டிகள் செல்லாததால், பெரும்பாலானவர்கள் தங்களது வாகனத்திற்கான இன்சூரன்ஸினை புதுபிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இந்த லாக்டவுன் காரணத்தினால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால், கடந்த 60 நாட்களில் குறைவான விபத்துகள் தான் உள்ளதாகவும், இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கணிசமான அளவே இன்சூரன்ஸ் க்ளைம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லாக்டவுனினால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் வகையில், அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம், அது தவிர இன்னும் சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிகள் புதுபிப்பதில் 10-15% தள்ளுபடிகள் அளித்துள்ளன. இது மூன்றாம் தரப்பு பாலிசிகளுக்கும் சில தள்ளுபடிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதே பாரதி ஆக்ஸா நிறுவனம் (Bharti AXA General Insurance Company Ltd) தங்களுடன் நீண்டகாலமாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு சில தள்ளுபடியை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய நிலவரப்படி, அனைத்து காப்பீட்டாளர்களும் இந்த குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்கவில்லை.
கொரோனாவால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தொழில் வளர்ச்சி 25 -30% வீழ்ச்சியினை இந்த துறை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் புதிய காப்பீடுகள் விற்பனை குறைந்துள்ளது. மேலும் லாக்டவுன் காரணமாக இன்சூரன்ஸ் புதுபித்தலும் குறைவு என்று பாலிசி பஜார்.காமின் மோட்டார் வணிகத் தலைவர் சஜ்ஜா பிரவீன் சவுத்ரி கூறியுள்ளார்.
இதே டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆதர்ஷ் அகர்வால் மோட்டாருக்கான இன்சூரன்ஸ் புதுபித்தல் விகிதம் குறைந்துவிட்டது. மேலும் உரிமைகோரல் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. ஆனால் பிரீமியங்களைக் குறைக்க நிறுவனம் திட்டமிடவில்லை. ஏனெனில் விரைவில் க்ளைம்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காப்பீட்டாளர்கள் எந்த அளவுக்கு தள்ளுபடியை வழங்குவார்கள் என்பது அவர்களின் தயாரிப்புகளை பொறுத்தது. எனினும் பொதுவாக வாகன பிரீமியங்கள் 10% குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோங்க கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது சற்று ஆறுதலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications