மும்பை: அமெரிக்க வர்த்தகச் சந்தையில் நேரடியாக முதலீட்டையும், தொழில்நுட்பம் சார்ந்த வெளிநாட்டவர்களை ஈர்க்கும் நோக்குடன் இந்நாட்டு அரசு, அமெரிக்காவில் முதலீடு செய்வோருக்கு அமெரிக்க நிரந்திர குடியிருப்பு அங்கீகாரம் அளிக்கப்படும் கிரீன் கார்டு வழங்கும் திட்டம் உள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் அமெரிக்காவிற்குக் குடிபெயர விரும்பும் 1,200 இந்தியர்கள் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக ஈமிக்ரேஷன் ஆலோசகர் தெரிவித்துள்ளார். எப்போதும் இல்லாத வகையில் இம்முறை அதிகமானோர் இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அமெரிக்கக் கனவு
இந்தியாவும், இந்திய மக்களும் எவ்வளவு உயர்ந்தாலும் அமெரிக்கக் கனவு அவர்களிடம் இருக்கும் இன்னும் விலகவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு ஆதாரமாக அமெரிக்க அரசின் கிரீன் கார்டு திட்டமான EB-5 விசா-வை பெற சுமார் நடப்பு நிதியாண்டில் 1,200 இந்தியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
விசா
EB-5 விசாவை பெற விண்ணப்பம் செய்தவர்கள் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5 மில்லியன் (ரூ.33.595 கோடி) - 8 மில்லியன் (ரூ.53.752 கோடி) டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
111 பேர்
2015ஆம் நிதியாண்டில் அதாவது அக்டோபர் 1,2014ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 30 2015ஆம் தேதி வரையிலான காலத்தில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு சுமார் 111 பேருக்கு EB-5 விசாவை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் நிதியாண்டு அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரையில்.
காசு கொடுத்து வாங்கும் கனவு
அமெரிக்கக் கனவு என்பது இந்தியர்கள் மட்டும் தான் உள்ளது என்று நீங்கள் தப்பு கணக்குப் போட்டுவிடக்கூடாது. உலகின் 90 சதவீத நாட்டு மக்களுக்கு அமெரிக்கக் கனவு இருக்கிறது.
இக்கனவை காசுக்கொடுத்தும் நினைவாக்கும் திட்டமே இந்த EB-5 விசா திட்டம். ஆனால் நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு அமெரிக்க அரசு அதிகளவிலான ஆதரவும் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
சீனா முதல் இடம்
2015ஆம் ஆண்டில் சீனா நாட்டவர்களுக்கு 8,156 பேருக்கும், வியட்நாம் நாட்டவர்களுக்கு 280 பேருக்கும், இந்திய மக்களுக்கு 111 பேருக்கும், தென் கொரியா நாட்டவர்களுக்கு 116 பேருக்கும், பிரிட்டன் 84 பேருக்கும், பாகிஸ்தான் 29 பேர்க்கும், நைஜீரியா 45 பேருக்கும், எகிப்த் நாட்டழர்களுக்கு 36 பேருக்கும் அமெரிக்க அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு EB-5 விசா வழங்கி கிரீன் கார்டு அளித்துள்ளது.
ஸ்டார்ட் அப் இந்தியா
இந்தியாவில் அமெரிக்கச் சந்தைக்கு நிகராக ஸ்டார்ட் அப் சந்தை விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில் EB-5 விசா பெற விண்ணப்பம் அளித்த 1200 பேரும் இந்தியாவிலேயே முதலீடு செய்து நம் நாட்டிலேயே வர்த்தகம் செய்யலாம்.
டொனால்டு டிராம்ப்
ஆனால் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிராம்ப் மற்றும் ஹில்லாரி கிளிண்டன் மத்தியிலான போட்டி அதிபயங்கரமாக உள்ளது. இந்நிலையில் பிரிட்டன் - ஐரோப்பிய பரிவின் மூலம் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் இப்படித் தான் இருக்கும் எனச் சில கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி பிரிட்டன் மக்களைப் போலச் சுயநலமாக அமெரிக்க மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை மட்டும் பாதுகாக்கும் தலைவருக்கு அதிகளவில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் டொனால்டு டிராம்ப் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியர்களுக்குப் பாதிப்பு
ஒருவேளை டொனால்டு டிராம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்.. இந்தியர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புவோம்.