வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாலே சந்தோஷம்,கொண்டாட்டம். அப்படியிருக்கையில் வாரத்தில் 3 நாள் விடுமுறை என்றால் என்ன சொல்லவா வேண்டும். உலகின் பல நாடுகளும் இந்த திட்டத்தினை அமல்படுத்த முயற்சித்து வருகின்றன.
வாரத்தில் 5 நாள் அல்லது 6 நாள் என்பது மனச் சோர்வை ஏற்படுவத்துவதாக கூறப்படும் நிலையில், வாரத்தில் வெறும் 4 நாட்கள் மட்டுமே பணி என்ற கோரிக்கை பல வருடங்களாகவே இருந்து வருகின்றது.
இந்த திட்டம் குறித்து பலரும் தங்களது கருத்தினை கூறி வந்தாலும், செயல்பாட்டில் சரிபட்டு வருமா? என்பது பெரும் கேள்வியாக இருந்தது.
சோதனை முயற்சி
ஆனால் இந்த அருமையான திட்டத்தினை இங்கிலாந்தில் உள்ள சில நிறுவனங்கள் சோதனை முயற்சியாக அமல்படுத்தின. இதற்கு பல நிறுவனங்களும் ஒப்புதலும் அளித்திருந்தன. இந்த திட்டத்தில் வேலை நாட்கள் குறைவு என்றாலும் சம்பளம் குறைக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
நிறுவனங்கள் வரவேற்பு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்தினை சேர்ந்த சுமார் 2900 பேர் இதில் பங்கேற்றனர். இவர்கள் 4 நாட்களில் 34 மணி நேரம் பணியாற்றினர். இதற்கிடையில் 6 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பெரும்பாலான இங்கிலாந்து நிறுவனங்கள் இந்த திட்டத்தினை ஏற்றுக் கொண்டுள்ளன.
ஊழியர்கள் பச்சை கொடி
இந்த சோதனையில் 61 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், இதில் பணிபுரிந்த ஊழியர்களில் மொத்தம் 92% இந்த திட்டத்திற்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்து ஊழியர்கள் மத்தியில் இந்த திட்டம் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம்.
மன அழுத்தம் இல்லை
இந்த திட்டத்தின் மூலம் சிறந்த வேலை, வாழ்க்கை சம நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 4 நாள் வேலை திட்டத்தில் மன அழுத்தம் என்பது கணிசமான குறைந்துள்ளதாகவும், 71% அதிகமான ஊழியர்கள் குறைந்த சோர்வே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கவலை, சோர்வு மற்றும் தூக்கப் பிரச்சனைகள் என்பது குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காராணமாக நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் சாத்தியமும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் வெற்றி
ஏற்கனவே இதனை சில நாடுகள் சோதனை நடத்தி, வெற்றிகரமாக முடிவினையும் கொடுத்துள்ளன. பல நாடுகளும் இதனை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், இங்கிலாந்தின் வெற்றி பெற்றுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இந்தியாவிலும் அமலுக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பது புரிகிறது.. எதிர்காலத்தில் இந்தியாவிலும் வந்தாலும் சொல்வதற்கில்லை தான்....
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications