அமேசான்: போராடி 370 ஊழியர்கள் பணிநீக்கம்.. லேபர் சட்டம் செம ஸ்ட்ராங் பாஸ்..!!

ஏஐ பயன்பாடு அதிகரித்த நாளில் இருந்து பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரையில் பணிநீக்கம் என்பது தினசரி கதையாக மாறியுள்ளது. இப்படியிருக்கையில் உலகின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமாந அமேசான் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதேபோல் இந்தியா, அமெரிக்காவில் பணிநீக்கம் செய்வது போல் ஐரோப்பாவில் பணிநீக்கம் செய்துவிட முடியாது. அங்கு லேபர் சட்டம் மிகவும் கடுமையானது என்பதால் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு அமேசான் அதிரடியான முடிவை எடுத்துள்ளது.

அமேசான் நிறுவனம் தனது ஐரோப்பா தலைமையகமான லக்சம்பர்க்கில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 370 பேரை பணியில் இருந்து நீக்க உள்ளது. இது லக்சம்பர்க் அலுவலகத்தில் இதுவரை செய்யப்பட்ட பணிநீக்கத்தில் இதுதான் அதிகப்படியான பணிநீக்கம்.

அமேசான்: போராடி 370 ஊழியர்கள் பணிநீக்கம்.. லேபர் சட்டம் செம ஸ்ட்ராங் பாஸ்..!!

லக்சம்பர்க் அலுவலகத்தில் தற்போது 4,370 ஊழியர்கள் உள்ள நிலையில் இது தற்போது பணிநீக்கம் செய்யப்படும் 370 ஊழியர்கள் மூலம் சுமார் 8.5 சதவீத ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட உள்ளனர். அக்டோபர் மாதம் அமேசான் தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 14,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது ஐரோப்பிய தலைமையகத்தில் பணிநீக்கம் நடக்கிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை நிறுவனத்தின் வர்த்தகத்திலும், மேம்பாட்டிலும் அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம். இந்த பணிநீக்கத்தில் சாப்ட்வேர் டெவலப்பர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்று ப்ளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.

AI தொழில்நுட்பம் நிறுவனத்தில் கோடிங் பணிகளை தானாக செய்ய ஆரம்பித்துள்ளதால் மனித ஊழியர்களின் தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக கூகுள் முதல் அமேசான் வரையில் அனைத்து பெரிய அமெரிக்க டெக் நிறுவனத்திலும் பணிநீக்கம் நடத்து வருகிறது.

அமேசான் முதலில் லக்சம்பர்க் அலுவலகத்தில் 470 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் ஐரோப்பிய யூனியன் விதிப்படி ஊழியர் பிரதிநிதிகளுடன் இரு வார பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த பணிநீக்கம் சுமார் 370ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் பணிநீக்க திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமேசான் மட்டும் அல்லாமல் உலகளவில் அனைத்து நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி செலவை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தினசரி செய்யப்பட்டும் எளிய வேலைகள் அனைத்தும் ஆட்டோமேட் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் கடினமான வேலைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வேலைகள் எளிமையாக்கப்பட்டு வருகிறது.

இதனால் மனித உழைப்பு தேவைப்படாத அனைத்து டிஜிட்டல் சேவை, டிஜிட்டல் துறையில் இத்தகைய பணிநீக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது. இனி வரும் காலக்கட்டத்திலும் இந்த பணிநீக்கம் தொடர்ந்து நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI தொழில்நுட்பம் பல பணிகளை எளிதாக்கி மனித ஊழியர்களின் தேவையை குறைக்கிறது.

இதனால் ஏஐ காட்டிலும் மக்கள் சிறப்பாக செயல்படும் அளவுக்கு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், அல்லது ஏஐ பயன்படுத்தி சிறப்பாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பணிநீக்கத்தில் இருந்து தப்பிக்க இதுதான் ஓரே வழி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+