உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இந்த ஆண்டில் பெருமளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி 2025 ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமேசான் நிறுவனத்தில் ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்க போகிறது. பல்வேறு பெரிய நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வண்ணம் இருக்கின்றன.

14000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதன் மூலம் அமேசான் நிறுவனம் ஒரு ஆண்டில் 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிக்க முடியுமாம். அமேசான் நிறுவனத்தில் வேலை செய்யும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை இதனால் 91,936 ஆக சுருங்கப் போகிறது. இவ்வாறு திடீரென 14,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதால் அமேசான் நிறுவனம் பெரிய அளவில் தங்களுடைய நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்ய இருப்பது தெரிய வருகிறது.
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தங்கள் நிறுவனம் தொழில்நுட்ப உதவியோடு செயல் திறனை மேம்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை மூலம் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகம் எடுக்கும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுதான் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் ,அமேசான் நிறுவனம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வேலையில் இருந்து நீக்கும் என தகவல் வெளியிட்டது.
இதனிடையே பணிநீக்கம் மட்டுமில்லாமல், அமேசான் நிறுவனம் மூத்த நிலை ஊழியர்களை பணிக்கு எடுப்பதை குறைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கான சம்பள கட்டமைப்புகளையும் மாற்றி அமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் அமேசான் நிறுவனம் கணிசமான அளவு ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுத்தது. அதாவது 2019 ஆம் ஆண்டில் அமேசானில் பணிபுரிந்த ஊழியர்களின் எண்ணிக்கை 7,98,000 ஆக இருந்தது 2021 ஆம் ஆண்டில் இது 16 லட்சம் ஆக அதிகரித்தது.
ஆனால் கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு அமேசான் நிறுவனம் படிப்படியாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் இருக்கிறது. 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 27,000 பேரை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
More From GoodReturns

தோசை, பிரியாணிய விட்டுத் தள்ளுங்க: AI வளர்ச்சியையும் பதம்பார்க்கும் ஈரான் பிரச்சனை? எப்படி?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications