வாஷிங்டன்: கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயம் அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடியது தான்.
கொரோனாவுக்காக பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மருந்து தான் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.
இந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டது.
இந்தியா தடை
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசு அத்தியாவசியமான 24 மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை செய்திருந்தது. ஆனால் அமெரிக்கா ஜானதிபதி தங்களுக்கு உதவுமாறு மோடியை தொடர்பு கொண்டதாகவும், பின் மிரட்டலுடன் கட்டாயம் உதவி செய்யாவிடில் பின் விளைகளை சந்திக்க நேரிடும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
அமெரிக்காவுக்கு உதவி
இந்த நிலையில் 12 மருந்து பொருட்களின் தடையும் நீக்கப்பட்டது. இதற்கிடையில் தான் இந்திய அமெரிக்கா நிறுவனம் ஒன்று தனது சொந்த நாட்டுகாக உதவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எப்படி எனில் 3.4 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை நியூயார்க் மற்றும் லூதியானாவுற்கு கொடுத்து உதவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யார் இந்த உற்பத்தியாளர்?
அமெரிக்காவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவரான நியூஜெர்சியை சேர்ந்தவரும், மிகப்பெரிய பில்லியனர்களில் ஒருவரான சிராக் மற்றும் சிந்து படேலுக்கு சொந்தமானது தான் Amneal Pharmaceuticals நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது அதன் பல்வேறு உற்பத்தி தளங்களில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை தயார் செய்வதாக அறிவித்துள்ளது.
நியூயார்கிற்கு தானம்
போதுமான மாத்திரைகளை தயாரித்து வருவதாகவும், இது மொத்த விற்பனையாளர்கள் மூலமாகவும், அதே தேவைப்படும் பெரிய நிறுவனங்களுக்கு நேரிடையாகவும் ,நாடு முழுவதும் விற்பனை செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் 2 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை நியூயார்க் நகரத்திற்கு தானமாக வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படியும் ஒரு திட்டம் உள்ளது
இது மட்டும் அல்ல இந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ மனைகளுக்கு நேரடியாக நன்கொடையாக வழங்குவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டும் அல்ல லூசியானவிற்கு இந்த நிறுவனம் 4,00,000 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் வெளியாகும் மனிதாபிமானம் மிக்க செயல் இதுவாகும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications