லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முதலீட்டு நிறுவனமான, ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் பிஎல்சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆண்ட்ரூ ஃபார்மிகா தனது பணியைத் திடீரென ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அனைத்தையும் தாண்டி பணியை ராஜினாமா செய்த பின்பு என்ன செய்யப்போகிறார் என்பது தான் அனைவரையும் தூக்கி வாரிப்போட்ட விஷயமாக உள்ளது.
ஆண்ட்ரூ ஃபார்மிகா
2019 ஆம் ஆண்டில் 68 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி மேலாண்மை நிறுவனமான ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட்-ல் உயர் பதவியான சிஇஓ பதவியில் ஃபார்மிகா பணியில் சேர்ந்தார். இந்நிலையில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட்
இந்நிலையில் ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான மேத்யூ பீஸ்லி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ளார். மேலும் ஃபார்மிகா சிஇஓ பதவியில் இருந்து மட்டும் அல்லாமல் இம்முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து விலக உள்ளார்.
சிஇஓ பதவி
ஃபார்மிகா தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது சிஇஓ பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், தனது வயதான பெற்றோருடன் இருக்கத் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
30 வருடம் பிரிட்டன்
பிரிட்டன் நாட்டில் சுமார் 30 வருடங்கள் பல நிறுவனத்தின் பல பதவிகளில் பணியாற்றி வந்த ஃபார்மிகா, மார்ச் 2019 இல் ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் இணைந்து தற்போது பதவியும் விலக உள்ளார்.
பல முக்கிய நிறுவனம்
ஜூபிடர் ஃபண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு முன், அவர் ஜானஸ் ஹென்டர்சன் குரூப் பிஎல்சி உடன் பணிபுரிந்தார், மேலும் 2017 இல் அமெரிக்க ஃபண்ட் ஹவுஸ் ஆன ஜானஸ் மற்றும் யு.கே. ஹென்டர்சன் இணைப்பில் முக்கியப் பங்கு வகித்தார்.
கடற்கரை
அசர்ட் மேனேஜர் பணியில் சுமார் 27 வருடம் அனுபவம் கொண்ட ஆண்ட்ரூ ஃபார்மிகா அக்டோபர் 1ஆம் தேதிக்கு பின்பு என்ன செய்யப்போகிறார் எனக் கேட்டதற்கு. "நான் கடற்கரையில் ரிலாக்ஸ் ஆக உட்கார்ந்து இருக்க விரும்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications