பெங்களூரு முதல் அமெரிக்கா வரை.. சாதித்து காட்டிய ராகுல் பாட்டில்!! Anthropic AI நிறுவனத்தில் சிடிஓ பொறுப்பு!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியர்கள் அமெரிக்காவிற்கே வரக்கூடாது என பல முட்டுக்கட்டை போடுகிறார். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை செய்யக்கூடாது , அமெரிக்க நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறுகிறார்.

அண்மையில் கூட இந்திய டெக்கிகள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவில் பல கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்தார். ஆனால் இந்தியர்களின் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்த வெளியாக கூடிய தகவல்கள் இருக்கின்றன. ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்தியநாதெல்லா, பெர்பிளெக் சிட்டி நிறுவனத்தின் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் என அமெரிக்க நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பெங்களூரு முதல் அமெரிக்கா வரை.. சாதித்த ராகுல் பாட்டில்!! Anthropic AI நிறுவனத்தில் சிடிஓ பொறுப்பு!!

இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஏஐ நிறுவனமான ஆந்த்ராபிக் (Anthropic AI) நிறுவனத்தின் தலைமை பொறுப்பு இந்தியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏஐ பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. ஏஐ சம்பந்தப்பட்ட ஆய்வுகளை நடத்தக்கூடிய இந்த நிறுவனம் தன்னுடைய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் பாட்டிலை நியமனம் செய்திருக்கிறது.

கூகுள், மெடா ,மைக்ரோசாப்ட் ஆகியவை ஏஐ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அவற்றுக்கு சவாலாக தான் Anthropic நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பினை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஐடி உள்கட்டமைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ராகுல் பாட்டிலுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது.

ஏஐ உள்கட்டமைப்பு, தயாரிப்புகள் ,ஏஐ சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகள், பொறியியல் என அனைத்து பிரிவுகளுக்கும் ராகுல் பாட்டில் தான் இனி தலைமை வகிக்கப் போகிறார். இங்கே வேலைக்கு சேர்வதற்கு முன்னதாக ஃபின்டெக் நிறுவனமான ஸ்டிரைப்பில் வேலை செய்தவர். ஐந்தரை ஆண்டு காலம் அங்கே பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வந்த இவர் அண்மையில் தான் அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பதவி ஏற்றார்.

அதற்கு முன்னர் ஒராக்கிள், அமேசான் வெப் சர்வீசஸ் , மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களில் எல்லாம் இவர் பிரதான பதவிகளை வகித்து வந்திருக்கிறார். பெங்களூரு பிஇஎஸ் பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பேச்சுலர் டிகிரி முடித்திருக்கிறார். இதனை அடுத்து அமெரிக்கா சென்ற இவர் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் முது நிலைப் பட்டப்படிப்பும் , வாஷிங்டன் பல்கலைகழகத்தில் எம்பிஏவும் படித்திருக்கிறார் .

ஐடி உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக ராகுல் பாட்டில் திகழ்ந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் ஆயிரமாக இருந்த இந்த நிறுவனத்தின் பிசினஸ் கஸ்டமர்களின் எண்ணிக்கை தற்போது மூன்று லட்சமாக அதிகரித்து இருக்கிறது நிறுவனத்தின் வருமானம் 87 மில்லியன் டாலர்களாக இருந்து 5 பில்லியன் டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. கூடிய விரைவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்நிறுவனம் கால் பதிக்க இருக்கிறது .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+