கூப்பர்டினோ: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், மொபைல் மற்றும் ஸமார்ட்போன் சந்தையைப் புரட்டிபோட்ட ஐபோன்-ஐ அறிமுகம் செய்து 9 வருடம் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் 1 கோடி ஐபோன்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
கூப்பர்டினோ பகுதியில் இருக்கும் ஆப்பிள் தலைமையகத்தில் நடந்த ஊழியர்கள் கூடத்தில் ஆப்பிள் சீஇஓ டிம் குக் 100 கோடி ஐபோன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்தார்.
சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுக நாள் முதல் தனிப்பட்ட கவனத்தை மக்கள் மத்தியில் ஈர்க்கிறது. இதற்கு முழுமையான காரணம் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் எளிமையான வடிவம் மற்றும் தொழில்நுட்பம் தான். இன்றைய மக்களின் தினசரி வாழ்வில் ஐபோன் என்பது ஒரு அங்கமாக மாறிய நிலையில் கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் 100 கோடிவது ஐபோனை விற்பனை செய்துள்ளது. இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என டிம் குக் தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஜூன் 29, 2007ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்ட 9 வருடங்களில் 100 கோடி மொபைல் விற்பனை செய்தது ஆப்பிள் நிறுவனம் மட்டும். அதுவும் தனது அனைத்து அறிமுகங்களும் ஆடம்பர சந்தைக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்குப் பின் நவம்பர் 2007ஆம் ஆண்டுப் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அயர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோனின் குறைந்தபட்ச விலை 499 டாலர் 2017ஆம் ஆண்டு ஐபோனின் 10வது ஆண்டு நினைவு தினத்தில் ஐபோன் டிசைனில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக ஆப்பிள் சீஇஓ டிம் குக் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் ஐபோன்
டிம் குக்
ஜூன் 29,2007
உலகச் சந்தை
முதல் ஐபோன் விலை
புதிய ஐபோன்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications