2018-ம் ஆண்டிற்கான எச்1-பி விசாக்கலுக்கு ஏப்ரல் 3 முதல் விண்ணப்பிக்க அனுமதி..!
ஐந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அமெரிக்கா சென்று வேலை செய்வதற்காக அதிகளவில் பெற்று வரும் 2018-ம் ஆண்டு எச்1-பி விசாக்கலுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 3-ம் தேதி முதல் பெறப்படுகின்றது.
முன்பு எப்போதும் போல அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவைகள் அமைப்பு எச்1-பி விசாக்கலுக்கான விண்ணப்பங்கள் எப்போது வரை பெறப்படும் என்று அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
இந்து அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவைகள் துறை எப்போது முதல் ஐந்து வேலை நாட்களில் விண்ணப்பங்களைப் பெறும்.
கட்டுப்பாடு
கடந்த சில ஆண்டுகளில் எச்1-பி விச்சக்களுக்கு மட்டும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவைகள் துறை அரசின் வரம்பிற்கு உட்பட்ட அதிகபட்ச அளவான 85,000 விண்ணப்பங்களைப் பெறுகின்றது.
இந்த 85,000 விண்ணப்பங்கள் கட்டுப்பாட்டில் 65,000 பேர் பொதுப் பிரிவாகவும், 20,000 நபர்கள் வெளிநாட்டு மாணவர்கள் யாரெல்லாம் முதுகலைப் பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற விரும்புபவர்களுக்காக அளிக்கப்படும்.
விலக்கு
ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிறுவனங்கள் பணிகளுக்காக வருபவர்களுக்கு இந்த எச்1-பி விசா எண்ணிக்கை வரம்பில் இருந்து விலக்கு உண்டு.
பிரீமியம் எச்-1பி விசா
ஏப்ரல் 3 முதல் பிரீமியம் எச்-1பி விச்சாக்கலுக்கான விண்ணப்பங்களுக்கு 6 மாதம் இடைக்காலத்தடையை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவைகள் அமைப்பு விதித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தத் தடையால் எப்போதும் வழக்கம் போலச் சாதரான வழியில் எச்1-பி விசாக்கலுக்கு விண்ணப்பிப்பவர்க்குத் தடை ஏதும் இல்லை.
வெள்ளை மாளிகை இது விரிவான குடியேற்றம் சீர்திருத்தம் ஒரு பகுதியாக இருக்கும் என்று மட்டும் தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டு விண்ணப்பத்திற்கான தேதி
ஏப்ரல் 3 முதல் 2018-ம் ஆண்டிற்கான எச்1-பி விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவைகள் அமைப்பு பெறும்.
மேலும் ஏப்ரல் 3-ம் தேதிக்கும் முன்பே 2018-ம் ஆண்டிற்கான எச்1-பி விசா பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தால் அந்த விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும்.
எந்த விண்ணப்பங்கள் எல்லாம் அனுமதிக்கப்படும்
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவைகள் அமைப்பு எச்1-பி விசா திட்டம் பற்றிக் கூறும் போது அதிகத் திறன் கொண்ட இலங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற ஊழியர்கள் அல்லது அதற்கு நிகரான ஊழியர்களின் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
எச்1பி விசா பெறுபவர்கள் முக்கியமாக அறிவியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
முறையாக விதிகளைப் பின்பற்றுதல்
எச்1-பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது எல்லா விதிகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும், இதனால் தாமதம் மற்றும் ஆதாரங்கள் கோரிக்கைகளைத் தவிர்க்கலாம்.
கட்டணம்
ஐ-129 படிவத்திற்குக் கட்டணம் 460 அமெரிக்க டாலர்கள் ஆகும். விண்ணப்பதாரர்கள் 14 நாட்களில் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications