சீனாவும் ரஷ்யாவும் வரும் ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த விண்வெளி வீரர்களாக மாற தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.
இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் கீத் ரைடர், சீனாவும் ரஷ்யாவும் வரும் ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வாளர்களாக மாற முயற்சி செய்து வருகின்றன.
இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றால், அடுத்த 30 ஆண்டுகளில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களை சுரண்டலாம் என்ற பகீர் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.
எச்சரிக்கை
அமெரிக்க பாதுகாப்பு துறையின் அறிக்கையின் படி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இணைந்தும் அல்லது தனித் தனியாகவும் விண்வெளி ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த முயல்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால், நிலவின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளார்.
விண்வெளியில் பாதுகாப்புக்கான சவால்கள்
ரைடரின் இந்த கருத்துகள், விண்வெளியில் பாதுகாப்புக்கான சவால்கள் 2022 என்ற அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அறிக்கைக்கு பின்னர் வந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு போட்டியாளராக இருக்கும் சீனா மற்றும் ரஷ்யாவும் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.
பிரச்சனை
DIA-வின் உளவுத் துறை அதிகாரி ஜான் எஃப் ஹத் கருத்துப்படி, சீனா, ரஷ்யா, வட கொரியா மற்றும் ஈரானிய விண்வெளி திட்டங்கள், அமெரிக்கா அல்லது கூட்டாளர்கள் நலனுக்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடியது எனவும் கூறியுள்ளார்.
ரஷ்யா, சீனாவின் நோக்கம் என்ன?
மொத்தத்தில் ரஷ்யாவும், சீனாவும் எதிர்காலத்தில் உலகின் சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களாக மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளனர். மாஸ்கோவும், பெய்ஜிங்கும் தங்களை முன்னணி ஆய்வாளர்களாக தங்களை நிலை நிறுத்த விரும்புகின்றனர். இதன் மூலம் அமெரிக்காவின் உலகளாவிய தலைமையை குறைமதிப்புக்கு உட்படுத்த விரும்புகிறார்கள்.
ரஷ்யா, சீனாவின் மாபெரும் வளர்ச்சி
மேலும் 2019 - 2021-க்கு இடையேயான காலகட்டத்தில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து 70% விண்வெளி கப்பல்களையும், இதே தனித்தனியாக 2015 - 2018க்கு இடையில் 200% அதிகமாகவும் வளர்ச்சி கண்டுள்ளன. மொத்தத்தில் சீனாவும், ரஷ்யாவும் தங்களது திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. தொடர்ந்து அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. குறிப்பாக செயற்கை கோள், ரீமோட் சென்சிங் நேவிகேஷன் என பலவகையிலும் விரிவாக்கம் செய்து வருகின்றன என அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.
விஞ்னானிகளின் கருத்து
அமெரிக்கா கூறுவது உண்மையாகும் பட்சத்தில் பல லட்சம் கோடி இயற்கை வளங்கள் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் கிடைக்கலாம். எனினும் இதற்காக அதிகாரப்பூர்வ ஆதாரம் என்பது இல்லை எனலாம். எனினும் கடந்த ஆண்டு கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் கோள் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், நிலாவில் உறைந்த நிலையில் கார்பன் டை ஆக்சைடு படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications