உலகம் முழுவதுமே சமூக வலைதளங்கள் பயன்பாடு பரவலாக அதிகரித்துவிட்டது . குறிப்பாக டீனேஜர்ஸ் எனப்படும் பதின்ம வயதினர் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பதின்ம வயதினர் அதிகம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக தொடர்ந்து கவலைகள் எழுப்பப்பட்டு வந்த வண்ணம் இருக்கின்றன. அமெரிக்காவில் சமூகவலைதளங்கள் பயன்படுத்தும் குழந்தைகளில் 40% பேர் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது ஒரு ஆய்வு.

அதிகம் சமூக வலைதளம் பயன்படுத்தும் குழந்தைகள் சமூகத்தோடு இணைந்து செயல்படாமலும் உளவியல் ரீதியான பாதிப்புக்கும் ஆளாகுகின்றனர். இத்தகைய சூழலில் ஆஸ்திரேய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியா பிரதமர் வரும் டிசம்பர் 10 ஆம் தேதியிலிருந்து ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பான சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது . ஆன்லைன் பாதுகாப்பு சட்ட திருத்தம் (சமூக ஊடக குறைந்தபட்ச வயது )மசோதா என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் வரும் டிசம்பர் 10ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது இதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக் டாக், எக்ஸ், ஸ்நாப் சாட் ,யூடியுப், ரெடிட் மற்றும் கிக் போன்ற சமூக வலைத்தளங்களை இனி பயன்படுத்த முடியாது.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் ஆஸ்திரேலியா பிரதமர் இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது இந்த உலகிற்கே முன்னோடியான ஒரு சமூக வலைத்தள தடை சட்டத்தை நாம் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறோம் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சட்டத்தை கொண்டு வருகிறோம் என தெரிவித்திருக்கிறார். இதன்படி சமூக வலைத்தள செயலிகளை செயல்படுத்தக்கூடிய நிறுவனங்கள் தங்களுடைய தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்களாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது .
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கணக்கு தொடங்க வேண்டும் குறிப்பாக அதற்கு பெற்றோரின் அனுமதியும் இருக்க வேண்டும் என்ற விதி அமலில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் இது சரியான முறையில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் பதின்ம வயதினர் தடையின்றி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் ஆஸ்திரேலிய அரசு இப்படி ஒரு நடவடிக்கையை கொண்டு வந்திருக்கிறது. ஏற்கனவே டென்மார்க் நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications