டாகா: நமது அண்டை நாடான பங்களாதேஷ் நாட்டில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எனவே அந்நாட்டிற்கு முட்டையினை ஏற்றுமதி செய்து இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டம் நடந்தது. இது பெரிய வன்முறையாக மாறி அந்நாட்டு அதிபர் மாளிகையையே மக்கள் சூறையாடினர். தற்போது அங்கே போராட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும் நிலைமை இதுவரை சீரடையவில்லை. குறிப்பாக பொருளாதாரம் மோசமாகிவிட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் சாதாரண மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கே பெரும்பாலானவர்கள் அசைவம் உண்பவர்கள் என்பதால் அங்கே முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்துவிட்டது.
பங்களாதேஷ் நாட்டில் ஒரு டஜன் முட்டையின் விலை 200 டாக்கா என்ற அளவில் அதிகரித்து உள்ளதாம். அதாவது 200 டாக்கா என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் 140 ரூபாய் ஆகும். இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் முட்டை வாங்குவதையே நிறுத்தி விட்டன.
நாட்டில் முட்டையின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வரும் சூழலில் வங்கதேச அரசு இதற்காக இந்தியாவின் உதவியை நாடியது. இதனை அடுத்து தற்போது மத்திய அரசின் முயற்சியால் இந்தியாவிலிருந்து 2.31 லட்சம் முட்டைகள் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் நாட்டில் உள்ள பெனாபுல் துறைமுகம் வழியாக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2.31 லட்சம் முட்டைகள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. அவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. பங்களாதேஷ் நாட்டில் முட்டையின் விலையை குறைப்பதற்காக அந்த நாட்டு அரசு 4.5 கோடி முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது என அறிவித்தது. இதன் மூலம் உள்நாட்டில் முட்டையின் விலை குறையுமென அரசு நம்புகிறது.
நாட்டில் நிலவிய வன்முறை போராட்டங்கள் காரணமாக முட்டை இறக்குமதி தாமதமான நிலையில் மீண்டும் அது வேகமெடுத்துள்ளது என அங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தியாவில் இருந்துதான் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என சொல்லப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து 90 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் நாட்டில் முட்டைக்கான இறக்குமதி வரி 25 சதவீதமாக இருந்து தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டையின் விலையும் குறைந்துள்ளதாக தெரிகிறது. வங்க தேச அரசின் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி அந்நாட்டிற்கு ஒரு நாளைக்கு 4 கோடி முட்டைகள் தேவைப்படுகிறதாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications