பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து தனியாக பிரிந்து வர தயாராகி வரும் நிலையில் தன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை காத்துக்கொள்ளும் விதமாக கடந்த 10 வருடமாக எவ்விதமான வட்டி உயர்வும் செய்யாமல் இருந்த பாங்க் ஆஃப் இங்கிலாந்து முதல் முறையாக வட்டியை உயர்த்தியுள்ளது.
இதன்படி பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் வட்டியை உயர்த்தும் அமைப்பில் இருக்கும் 9 பேரில் 7 பேர் உயர்த்த கோரியதன் விலைவாக 0.25 சதவீத வரியை 0.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரெக்சிஸ் வாக்கெடுப்புக்காக ஆகஸ்ட் 2016இல் வட்டியை குறைத்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது. 2007ஆம் சர்வதேச சந்தையில் நிதிநெருக்கடி ஏற்பட்டபோது வட்டியை உயர்த்தியது. அதன் பின் இப்போது தான் வட்டியை உயர்த்தியுள்ளது.