லண்டன்: பிரிட்டன் நாட்டின் மிக பழமையான வங்கிகளில் ஒன்றான லாயிட்ஸ் வங்கி செலவீணத்தை குறைக்கவும், வங்கி செயல்பாட்டை மேம்படுத்ததவும் 9,000 பணியாளரகளை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1 பில்லியன் பவுண்டு சேமிக்க முடியும் என லாயிட்ஸ் பாங்கிங் குரூப் தெரிவித்துள்ளது.
இவ்வங்கி பர்மிங்காம் பகுதியில் ஜான் டைலர் மற்றும் சாம்சன் லாயிட் ஆகியோரால் 1765ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மேலும் இந்நிறுவனம் குறைந்த காலகட்டத்திலேயே அதிகப்படியான வங்கிகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டதால் பிரிட்டனில் 4 முக்கிய வங்கிகளில் ஒன்றாக உருவானது.
லாயிட்ஸ் பாங்கிங் குரூப்
வங்கி செயல்பாட்டை மேம்படுத்தவும், செலவீனத்தை குறைக்கவும் வங்கி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் வருடத்திற்கு 45 சதவீதம் வருமான அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, இதில் பணியாளர்களை குறைப்பதும் அடங்கும் என இந்த வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது.
9,000 பணியாளர்கள்
2017ஆம் ஆண்டுக்குள் வங்கியின் 9,000 முழு நேர பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்க திட்டமிட்டுள்ளது.
சேமிப்பு
பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்கும் பொருட்டு நிறுவன செலவுகளில் 2017ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் பவுண்டு சேமிக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் லாயிட்ஸ் பாங்கிங் குரூப் கடந்த சில வருடங்களில் சுமார் 150 வங்கிக் கிளைகளை முடியுள்ளது.
2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடி
இந்நிறுவனம் உலக முழுவதும் சந்தித்த 2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடி இவ்வங்கியை அதிகளவில் பாதித்தது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் தனது 10,000 பணியாட்களை பணி நீக்கம் செய்தது. ராகுராம் ராஜன் சொன்னது பழித்திடுமோ...