விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் அடுத்தடுத்து விதித்த தடையின் காரணமாக அடுத்தடுத்து வெளியேறியது. அப்படி ரஷ்யாவை விட்டு வெளியேற முடிவு செய்த முக்கியமான நிறுவனங்களில் Shell மிகவும் முக்கியமானது.
இதற்கு முக்கியக் காரணம் பிற நிறுவனங்களைக் காட்டிலும் ஷெல் நிறுவனம் அதிகளவிலான முதலீடு செய்து பல முக்கியமான நிறுவனங்களில் பங்குகளையும் வைத்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஷெல் நிறுவனத்தின் வெளியேற்றம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்தியா களத்தில் இறங்கியுள்ளது.
ரஷ்யா
உலக நாடுகளின் தடையில் இருந்து ரஷ்யா மீண்டு வர முடியாத நிலையில் அந்நாட்டில் இருக்கும் சர்வதேச நிறுவனங்கள் வேக வேகமாக வெளியேறி வருகிறது. அப்படி வெளியேறி வரும் நிறுவனங்கள் அந்நாட்டில் கிடைத்த, வருவாய், லாபம், முதலீடு, தொழிற்சாலை, கடைகள் என அனைத்தையும் மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேறுகிறது.
Shell நிறுவனம்
இந்த நிலையில் உலகின் முன்னணி எரிபொருள் விற்பனை நிறுவனமான Shell, ரஷ்யாவின் Sakhalin-2 LNG தொழிற்சாலையில் வைத்திருக்கும் 27.5 சதவீத பங்குகளை அப்படியே விட்டு விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் எப்படியாவது இதைப் பணமாக்க வேண்டும் என முடிவு செய்து உள்ளது.
ONGC விதேஷ், கெயில் நிறுவனங்கள்
இந்த முயற்சியில் பிரிட்டன் நாட்டிற்கும், ரஷ்யாவுக்கும் நட்பு நாடாக விளங்கும் இந்தியா உடன் டீல் பேச துவங்கியுள்ளது பிரிட்டன் நாட்டின் ஷெல் நிறுவனம். ரஷ்யாவின் Sakhalin-2 LNG தொழிற்சாலையில் பிரிட்டன் Shell வைத்திருக்கும் 27.5 சதவீத பங்குகளை இந்தியாவின் ONGC விதேஷ் மற்றும் GAIL நிறுவனத்திடம் விற்பனை செய்யத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையைத் துவங்கி உள்ளது.
Sakhalin-2 LNG தொழிற்சாலை
உலக நாடுகளின் தடைக்குப் பின்பும் இந்தியா ரஷ்யாவிடம் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது. இதேவேளையில் இந்தியா ரஷ்யாவின் ஏற்கனவே பல எரிவாயு, கச்சா எண்ணெய் திட்டங்களில் முதலீடு செய்துள்ள வேளையில் Sakhalin-2 LNG தொழிற்சாலையின் 27.5 சதவீத பங்குகள் கூடுதல் ஆதிக்கத்தையும் வாய்ப்பையும் இந்தியாவுக்கு ரஷ்யாவில் கிடைக்கும்.
இந்தியா - ரஷ்யா
ஏற்கனவே இந்தியா ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ள நிலையில் LNG பிரிவிலும் புதிய வர்த்தக வாய்ப்பும், லாபமும் கிடைக்க உள்ளது. இந்தியாவின் பல்வேறு முதலீடுகள் மூலம் ரஷ்யாவில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஈவுத்தொகை பெற்று வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications