தாய்லாந்து: தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளும் தீவிரமாக சண்டை போட்டு வருகின்றன. தாய்லாந்து போர் விமானங்களை அனுப்பி கம்போடியாவை தாக்குகிறது. இரு நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் கவனமாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
எல்லை பிரச்சினை: தாய்லாந்திருக்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லையில் என்ன பிரச்சனை ,திடீரென இரண்டு நாடுகளும் குண்டுகளை வீசி தாக்கிக்கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். கம்போடியா, தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சண்டைக்கு முக்கிய காரணமாக இருப்பது ஒரு பகுதி தான். இதனை எமரால்டு டிரையாங்கில் என அழைக்கிறார்கள்.
எமரால்டு டிரையாங்கில் : தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து கம்போடியாவுடன் எல்லையை பகிர்கிறது. எல்லை பகிர்ந்தாலே குறிப்பிட்ட இடம் எங்களுக்கே சொந்தம் என சண்டை ஏற்படுவது வாடிக்கை தானே. இங்கே இடம் மட்டும் பிரச்சினை கிடையாது. எமரால்டு டிரையாங்கில் என்பது முக்கோண வடிவிலான ஒரு பகுதி. இங்கே தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய மூன்று பகுதிகளும் சந்திக்கின்றன. இங்கே பாரம்பரிய இந்து கோயில்களும் புத்த கோயில்களும் இருக்கின்றன.

எல்லையில் இருக்கும் சிவன் கோயில்: எல்லையில் தாய்நாந்தில் சுரின் என்ற மாகாணமும் கம்போடியாவில் ஓட்டர் மீஞ்சே என்ற மாகாணமும் அமைந்துள்ளன. தாய்லாந்தின் சூரின் மாகாணத்தில் பிரசாத் தா மூன் தோம் (Prasat Ta Muen Thom) என்ற கோயில் இருக்கிறது. அதேபோல கம்போடியாவில் பிரசாத் பிரி விஹார் (Prasat Preah Vihear) என்ற ஒரு கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு கோயில்களுமே இந்து கோயில்கள் இவை குறிப்பிட்ட இடைவெளியில் அமைந்திருக்கின்றன. இதே போல புத்த கோயிலும் இருக்கிறது.
12ஆம் நூற்றாண்டு கோயில்: இதில் பிரசாத் தா மூன் தோம் கோயில் 12ஆவது நூற்றாண்டில் இந்த கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் சிவனை வழிபடுகின்றனர். இயற்கையாகவே கல்லில் உருவான சிவலிங்கத்தை மக்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள். மொத்தமாக இந்த பகுதியே யாருக்கு சொந்தம் என்பது தான் பிரச்சினை.
கோயிலில் வழிபடும் மக்கள்: இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களும் வந்து இந்த கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோயில்கள் அமைந்துள்ள பகுதி எங்களுக்கே சொந்தம் என கம்போடியா கூறுகிறது ஆனால் தாய்லாந்து எங்களுக்கு தான் சொந்தம் என பதிலுக்கு சண்டை போட்டு வருகிறது. இங்கே இரு நாட்டு ராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். அப்படி அடிக்கடி இந்த பகுதியில் அவ்வப்போது பிரச்சனைகளும் இருநாட்டு எல்லையிலும் பதற்றம் உண்டாகும் பின்னர் அந்த பதற்றம் தனித்துவிடும்.

இப்போது ஏன் சண்டை? : ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் கம்போடியா நாட்டுப் படைகள் தாய்லாந்துக்குள் அத்துமீறிநுழைந்ததாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. இதனை அடுத்து பதற்றம் அதிகமாகிவிட்டது. 1907 ஆம் ஆண்டு பிரெஞ்ச் காலனி அரசு இரு நாடுகளையும் பிரித்து ஒரு வரைபடத்தை தயாரித்தது. அந்த வரைபடத்தின் படி இந்த பகுதி கம்போடியாவுக்கு சொந்தம், ஆனால் தாய்லாந்து இது எங்களுக்கு சொந்தமானது அந்த வரைபடம் தவறானது எனக் கூறி வருகிறது.
நீதிமன்ற தீர்ப்பை தாய்லாந்து ஏற்கவில்லை: கம்போடியா அரசு இதனை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது அப்போது சர்வதேச நீதிமன்றம் இந்த கோயில்கள் அமைந்துள்ள பகுதி கம்போடியாவுக்கே சொந்தம் என தீர்ப்பு தந்தது. ஆனால் அந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்க மறுக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications