உலகின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக விளங்கும் சீனா-வை தலைமையிடமாகக் கொண்ட இரு கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்விதமான சந்தேகமும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும், குறிப்பாக அமெரிக்கத் துறைமுகத்தில் இருக்கும் கண்டெய்னர்களை அதிகளவில் வாங்கிக் குவித்து வருவது தெரிய வந்துள்ளது.
சீன நிறுவனங்களின் வேலையைக் கண்டு தற்போது அமெரிக்க அரசு அதிகாரிகள் அதிர்ந்து உள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது.. எதற்காகச் சீன நிறுவனங்கள் காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவிக்கிறது..?
சீன நிறுவனங்கள்
இரண்டு சீன நிறுவனங்கள் அமெரிக்கத் துறைமுகத்தில் இருந்து சரக்கு உடன் இருக்கும் கண்டெய்னர்களைக் காட்டிலும், காலி கண்டெய்னர்களை அதிகளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது சிஎன்பிசி தற்போது கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்கத் துறைமுகங்கள்
போர்ட் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட் ஆஃப் லாங் பீச், யு.எஸ் கஸ்டம்ஸ் மற்றும் ஐஹெச்எஸ் மார்கிட் PIERS ஏற்றுமதி இறக்குமதி தரவுகளை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் PIERS அமெரிக்கக் கஸ்டம்ஸ் சரக்கு கப்பலின் கண்காணித்துத் தரவுகளைச் சேகரித்து வருகிறது.
OOCL, Cosco நிறுவனம்
ஹாங்காங்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் OOCL மற்றும் ஷாங்காய்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அதன் தாய் நிறுவனமான காஸ்கோ ஆகிய அதிகப்படியான காலி கண்டெய்னர்களை அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளதாகச் சிஎன்பிசி ஆய்வுகள் கூறுகிறது.
காலி கண்டெய்னர்கள்
2020 மற்றும் 2021 தரவுகள் படி OOCL சரக்குக் கொண்ட கண்டெய்னர்களின் ஏற்றுமதி 35.1 சதவீதம் சரிந்த நிலையில், காலி கண்டெய்னர்களை ஏற்றுமதி 104.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் காஸ்கோ சரக்குக் கொண்ட கண்டெய்னர்களின் ஏற்றுமதி வெறும் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்த நிலையில், காலி கண்டெய்னர்களை ஏற்றுமதி 104.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்குப் பாதிப்பு
காலி கண்டெய்னர்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் காரணத்தால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் போதுமான கண்டெய்னர்கள் இல்லாமல் காலதாமதமாகவும், அதிக விலை கொடுத்துக் கண்டெய்னர்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவின் தயாரிப்புகளின் விலை தானாக உயர்கிறது.
ஆய்வு
தற்போது அமெரிக்காவின் மத்திய கடல்சார் ஆணையம் விதிமுறை மீறப்பட்டு உள்ளதா, இதற்கான விதிமுறைகள் இடங்கொடுக்கிறதா என்பதை ஆய்வு செய்யத் துவங்கியது மட்டும் அல்லாமல் , தரவுகள் ஆய்வு செய்து சீன நிறுவனங்களான OOCL மற்றும் COSCO ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளது.
கொரோனா
சீனா நிறுவனங்கள் காலி கண்டெய்னர்கள் வாங்கும் வழக்கத்தைக் கொரோனா தொற்று துவங்கிய நாளில் இருந்தே செய்து வருகிறது. இதற்குப் பின்பு இருக்கும் அடிப்படை காரணத்தையும், பலன்கள் குறித்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications