அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக பிரச்சனைகள் இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் வர்த்தகம் தொடங்கி, பின்பு எது எடுத்தாலும் பிரச்சனையாக மாறத் தொடங்கியது.
இதற்கிடையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் வருக்கைக்கு பின்பாவது இந்த பிரச்சனைகள் குறையலாம். மோதல் மாறலாம் என்றெல்லாம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதனால் சீனாவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் சீனாவின் மீது அமெரிக்கா மீண்டும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டது.
அமெரிக்காவின் புதிய மசோதா
தற்போது அமெரிக்க பங்கு சந்தைகளில் உள்ள சீன நிறுவனங்களின் நடவடிக்கைகளை முடக்கும் விதமாக, சீன நிறுவனங்களுக்கு எதிரான மசோதா ஒன்றை அமெரிக்கா புதன்கிழமையன்று நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே இது குறித்தான மசோதாவை அமெரிக்கா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
பங்கு சந்தையில் இருந்து நீக்கலாம்
அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து சில சீன நிறுவனங்களை நீக்கும் மசோதாவை கடந்த ஆண்டிலேயே, குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் ஜான் கென்னடி, ஜனநாயக கட்சியை சேர்ந்த கிறிஸ்வான் ஹோலன் ஆகிய இருவரும் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினர். இந்த சட்டத்தின் படி, அமெரிக்க சட்டங்களை பின்பற்றாத சீன நிறுவனங்களை அமெரிக்க பங்கு சந்தைகளிலிருந்து நீக்க முடியும்.
புதிய மசோதா என்ன சொல்கிறது?
இந்த மசோதாவின் படி, அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அந்நிய அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் அமெரிக்காவின் பங்கு சந்தை வாரியத்தின் கணக்கு தேவைகளுக்கு ஏற்ப இணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இணங்கின. ஆனால் சீனா நிறுவனங்கள் அதனை செய்யவில்லை.
எத்தனை சீன நிறுவனங்கள்?
காங்கிரஸ் கமிஷனின் புள்ளி விவரங்கள் படி, அக்டோபர் தொடக்கத்தில் 217 சீன நிறுவனங்கள், அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியிடப்பட்டுள்ளன. பங்கு விலைகளின் அடிப்படையில் அவற்றின் மதிப்பு 2.2 டிரில்லியன் டாலர் மதிப்புடையவை. அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள சில நிறுவனங்கள் ஆசிய பங்கு சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.
பங்குகள் விலை குறையலாம்
சீனா நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தையில் டீலிஸ்ட் செய்யப்பட்டால், ஆசிய பங்கு சந்தைகளில் உள்ள அதன் பங்குகள் மதிப்பு குறையலாம். இந்த பட்டியலில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவாகும். இந்த நிறுவனம் கடந்த 2014ல் அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. இது அப்போதே 25 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது. இப்படி சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள் கூட, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையினால் பெரும் பின்னடைவை சந்திக்கலாம்.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications