அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக மோதல் இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன தயாரிப்புகளுக்கு அதிக வரி விதித்ததன் பின்னணியில், பல சீன எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் உற்பத்தியாளர்கள் இந்திய நிறுவனங்களுக்கு பெரிய தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் இந்திய உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் எலெக்ட்ரானிக்ஸ் கூறுகளை வாங்கி, தங்கள் தொழிலில் வளர்ச்சி பெற முடிகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி கொள்கையின் மூலம் சீன பொருட்களுக்கு 125% வரி விதித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதன் காரணமாக சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்கள் அதிக விலைக்கே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல், சீன உற்பத்தியாளர்களுக்கு புதிய ஆர்டர்கள் குறைந்து விட்டன. ஏனெனில் அமெரிக்கா மட்டும் அல்லாது பல நாடுகள் சீனாவிலிருந்து இறக்குமதியை குறைக்கும் முடிவை எடுத்து வருகின்றன. இதனால் சீன உற்பத்தியாளர்கள் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், சீன எலெக்ட்ரானிக்ஸ் Spare parts உற்பத்தியாளர்கள் தங்கள் விற்பனையை மீண்டும் அதிகரிக்க இந்தியா போன்ற நாடுகளுக்கு தள்ளுபடி விலைகளை வழங்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக, 5% வரை விலை குறைப்பை வழங்க முன்வந்துள்ளனர். இது போன்ற தள்ளுபடி சலுகை எலெக்ட்ரானிக்ஸ் துறையில் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தத் துறையில் முப்பெரும் போட்டி இருப்பதால், லாப வரம்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் சீன Spare parts இறக்குமதி சுமார் 75% ஆக உள்ளது. இதன் மூலம் இந்திய உற்பத்தியாளர்கள் தங்களுடைய தயாரிப்பு செலவினைக் குறைத்து அதிக லாபம் சம்பாதிக்க வாய்ப்பு பெறுகின்றனர். உதாரணமாக தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, ஸ்மார்ட்போன் போன்ற உற்பத்தி நிறுவனங்கள் இந்த தள்ளுபடிகளை பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும் திட்டங்களை வகுத்து வருகின்றன.
இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் கூறு(Electronic component) இறக்குமதி கடந்த நிதியாண்டில் 36.7% உயர்ந்து $34.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. 2019ஆம் நிதியாண்டில் $15.8 பில்லியனாக இருந்த இறக்குமதி தற்போது 118.2% அதிகரித்துள்ளது. இது மின்னணு Spare partsகளுக்கு இந்தியா வெளிநாடுகளை பெரிதும் சார்ந்திருப்பதைக் காட்டுகிறது.
முன்னாள் நிதியாண்டுகளில் இருந்து பார்த்தால் இந்திய உற்பத்தி துறை மெதுவாக வளர்ச்சி பெற்று வருவது உண்மை. ஆனால் அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல் போன்ற நிகழ்வுகள் இந்திய நிறுவனங்களுக்கு தற்காலிக லாபத்தை உருவாக்கும் வாய்ப்பு தருகின்றன. இந்திய நிறுவனங்கள் மே-ஜூன் மாதங்களில் இருந்து புதிய ஆர்டர்களை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கவும், விற்பனையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
நிபுணர் கூறிய கருத்துக்கள், "சீன உற்பத்தியாளர்கள் தற்போது மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். ஏற்றுமதி ஆர்டர்கள் குறைவதால் விலை மறுபரிசீலனை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை" என கோத்ரேஜ் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், "இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை சீன உற்பத்தியாளர்கள் முக்கியமாகக் கருதி தள்ளுபடி வழங்குகின்றனர்" என தொலைக்காட்சி ஒப்பந்த உற்பத்தியாளர் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் நிர்வாகி கூறியுள்ளார்.
உலக வர்த்தகத்தில் உள்ள மாற்றங்கள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக உள்ளது. சீனாவின் தள்ளுபடி கொள்கை இந்திய உற்பத்தியாளர்களை பலப்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால் இது நீண்ட கால வளர்ச்சிக்கு போதுமானதா அல்லது இது தற்காலிகமான ஒரு வர்த்தக வாய்ப்பா என்பது வருங்காலத்தில் தெரியும்.
More From GoodReturns

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications