சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிக நெருக்கமான ராணுவத் தளபதியும், அந்நாட்டின் மத்திய ராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) துணைத் தலைவருமான ஜெனரல் ஜாங் யூஷியா (Zhang Youxia) மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தபட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். சீன அரசு ஒருவர் மீது குற்றம்சாட்டினால் என்ன நடக்கும் என்பது உலகிற்கே தெரியும், இப்படியிருக்கையில் Zhang Youxia மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஒட்டுமொத்த சீனாவை கதிகலங்கடித்துள்ளது என்றால் மிகையில்லை.
சீன பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, அந்நாட்டின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசியவிட்டதும், ராணுவத்தில் அதிகாரிகளை பதவி உயர்வு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதேபோல், மத்திய ராணுவ ஆணையத்தின் ஜாயின்ட் ஸ்டாஃப் துறைத் தலைவரான லியூ ஜென்லியும் (Liu Zenli) விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.

ஜாங் யூஷியா, ஜி ஜின்பிங்கின் மிக நம்பிக்கைக்குரிய நண்பராக கருதப்பட்டவர். கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொலிட்பீரோ உறுப்பினரான இவர், 1979இல் வியட்நாம் உடனான சீனாவின் மோதலில் நேரடியாகப் பங்கேற்று போர் அனுபவம் கொண்ட சில உயரதிகாரிகளில் மிகவும் முக்கியமானவர்.
இவர் மீதான விசாரணை சீன ராணுவ உயர்மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆய்வாளர்களும், வெளிநாட்டு ராணுவம், குறிப்பாக சீனா ராணுவம் இந்த பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தைவான் உஷார் நிலை உயர்த்தியது
ஜாங் யூஷியா விவகாரம் சீன ராணுவத்தில் பூதாகரமாக வெடித்திருக்கும் இதேவேளையில், தைவான் நாட்டை கைப்பற்றும் தனது கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை 6 மணியளவில் சீன ராணுவம் ஐந்து விமானங்கள் மற்றும் எட்டு கடற்படைக் கப்பல்கள் தைவான் நாட்டை குறிவத்து நிறுத்தியுள்ளது சீனா. இதனால் தைவான் தனது பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளது.
சீன உள்நாட்டு அரசியல் பின்னணி
ஜி ஜின்பிங்கின் ஆட்சியில் ராணுவத்தில் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பல உயரதிகாரிகள் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் ஜாங் யூஷியா போன்ற ஜி ஜின்பிங்-கிற்கு மிக நெருக்கமானவரை விசாரிப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
இதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத்தில் பிளவு ஏற்பட்டு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் உயர்மட்ட அதிகாரத்தில் புது போராட்டம் வெட்டித்திருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் (Zhang Youxia மீதான விராணையே ஜி ஜின்பிங் எதிராக யாரும் திரும்ப கூடாது என்பதற்காக கூட இருக்கலாம் என கருத்தும் நிலவுகிறது.
இதேவேளையில் அணு ஆயுத ரகசியம் கசிவு என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு என்பதால் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா - சீனா மத்தியில் பணிப்போர் நிலவி வரும் வேளையில் இத்தகைய தகவல் கசிந்தால் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இதனால் தற்போது தைவான், ஜப்பான், தென் கொரியா போன்ற அண்டை நாடுகள் சீனாவின் அடுத்த நடவடிக்கைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருகின்றன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications