அமெரிக்க அதிபர் ரஷ்யா கச்சா எண்ணெய்யை யாரும் வாங்க கூடாது மாறி மாறி வரியை விதித்து வரும் வேளையில், சீனா அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு எதையும் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து ரஷ்யா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இதை டிரம்ப் எதிர்த்து கேள்வி கேட்ட முடியாமல் மாடிக்கொண்டு உள்ளார்.
சீனா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை ரஷ்யா, ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளிடம் இருந்து வாங்கி பூர்த்தி செய்து வரும் வேளையில், அமெரிக்கா இந்த 3 நாட்டு எண்ணெய் மீது கட்டுப்பாடுகள், தடைகள், வரிகளை விதித்துள்ளது. இந்த நிலையில் சீனா அமெரிக்காவின் மிரட்டல்களை கண்டுக்கொள்ளாமல் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது.

இதேவேளையில் இந்தியா மேற்கத்திய நாடுகளின் கடுமையான தடைகளால் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை வேகமாக குறைத்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி உடன் கிடைக்கும் குறைந்த விலை கச்சா எண்ணெய்யை சீனா பெருமளவு வாங்கி வருகிறது. இந்தியா ரஷ்யா எண்ணெய் வாங்குவதை குறைத்திருக்கும் வேளையில் இதை சீனா பயன்படுத்திக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜனவரி மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தியது. ஏனெனில் ரிலையன்ஸ் சுத்திகரிக்கும் பொருட்களில் பெரும்பாலானவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், இதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளது.
கப்பல் மற்றும் வர்த்தக தரவுகளின்படி, ஜனவரி மாதம் இதுவரை சீனா ரஷ்ய கச்சா எண்ணெய்யை சராசரியாக ஒரு நாளுக்கு 4.05 லட்சம் பேரல் இறக்குமதி செய்துள்ளது. இது ஜூன் 2023-க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும். ரஷ்யாவிலிருந்து கப்பல் மூலம் தினமும் 14 லட்சம் பேரல் அளவிலான கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இதில் 4 லட்சம் பேரலை சீனா மட்டும் வாங்குகிறது.
Vortexa தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதி 15 லட்சம் பேரலுக்கு மேல் சென்றது. 2025-ல் பெரும்பாலான மாதங்களில் இது 12 லட்சம் பேரலாக இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பில் சீனாவுக்கு பெரும்பகுதி சென்றது. ஏனெனில் அமெரிக்கா வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை கடுமையாக கட்டுப்படுத்தியதால் வெனிசுலா எண்ணெய் கிடைப்பது குறைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி கடுமையாக குறைந்துள்ளது. டிசம்பரில் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி தினசரி 9.29 லட்சம் பேரலாக குறைந்தது. இது 2022 டிசம்பருக்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். 2024-ல் சராசரியாக 13.6 லட்சம் பேரலாகவும், 2025-ல் 12.7 லட்சம் பேரலாகவும் இருந்தது.
ரஷ்யாவில் இருந்து வாங்கும் கூடுதல் கச்சா எண்ணெய் மூலம் வெனிசூலாவில் இருந்து தடைபெற்ற சப்ளை ஈடுசெய்துள்ளது சீனா.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications