இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..!

பெய்ஜிங்: சீனாவின் சிறந்த தோற்றுவிப்பான கொரோனா வைரஸினால் இன்று உலகமே அரண்டு போயுள்ளது. சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தாலும், அதை விட பல மடங்கு மற்ற நாடுகளுக்கும் அதுவும் படு வேகமாக பரவி வருகிறது.

அதிலும் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த கொரோனாவில் பெரும் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டில் இதுவரை 3,11,637 பேருக்கும் கொரோனாவின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே 8,454 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இதே உலகம் முழுக்க 12,03,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 64,744 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா

இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா

முதன் முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய இந்த கொடிய வைரஸினால், சீனா முழுவதும் முடங்கியது எனலாம். கடந்த டிசம்பர் மாத பிற்பகுதியில் ஆரம்பித்த இந்த வைரஸின் தாக்கம், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இந்த நிலையில் தற்போது இயல்பு திரும்பிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மார்ச் மாத இறுதியில் இருந்தே சீனா தொழிலாளர்கள் தங்களது பணிக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

சீனாவின் ஏற்றுமதி பாதிப்பு

சீனாவின் ஏற்றுமதி பாதிப்பு

ஆக சீனாவில் தற்போது வழக்கம்போல உற்பத்தி ஆரம்பித்து இருந்தாலும், சீனாவுக்கு மேலும் தொடர்ந்து பாதிப்பு இருக்கத்தான் செய்யும் என்கிறார்கள் ஆய்வாளார்கள். ஏனெனில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் உலகம் முழுக்க இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் ஜிடிபி விகிதத்தில் கணிசமான அளவு இதில் அடங்கும்.

தேவையும் குறைந்து வருகிறது

தேவையும் குறைந்து வருகிறது

ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், நுகர்வானது பெரும்பாலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தேவையும் குறைந்துள்ளது. மேலும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் உலகப் பொருளாதாரமே மந்த நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

உற்பத்தி விரிவடைய தொடக்கம்

உற்பத்தி விரிவடைய தொடக்கம்

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி ஜனவரியில் ஏற்பட்ட படுவீழ்ச்சிக்கு பிறகு, சீனா தொழில்சாலைகள் மார்ச்சிலிருந்து விரிவடைய தொடங்கியுள்ளது. அதிலும் சீனாவின் முக்கிய நகரமான பெய்ஜிங் மற்றும் ஹூபே மாகாணம் பெரும்பாலும் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது. இதனால் சீனாவின் உற்பத்தி அந்த சமயத்தில் மிக குறைந்திருந்தது.

உற்பத்தி குறியீடு அதிகரிப்பு

உற்பத்தி குறியீடு அதிகரிப்பு

மேலும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் பரவிய நிலையில் சீனா இந்த முக்கிய மாகணங்களை லாக்டவுன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பின் தங்கின. அவற்றில் பல அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பர்சேஸிங் மேனேஜர்ஸ் குறியீடு 40.3 ஆக இருந்தது. இதுவே கடந்த மார்ச் மாதத்தில் 50.1 ஆக அதிகரித்துள்ளது.

நல்ல கெட்ட விஷயம் இதோ?

நல்ல கெட்ட விஷயம் இதோ?

இந்த நிலையில் சீனாவில் தற்போது நடந்து வரும் நல்ல விஷயம், அங்கு மீண்டும் வழக்கம்போல் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது தான். ஆனால் இதில் கெட்ட விஷயம் என்னவெனில் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் பரவியுள்ள நிலையில், தேவை உலகம் முழுக்க குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+