உலகின் டெக் ஜாம்பவானகளில் ஒன்றாக ஜியோமி நிறுவனம் கடந்த காலாண்டில் கண்ட மெதுவான வளர்ச்சிக்கு பிறகு, பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் நிலவி வரும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் , சீன நிறுவனங்கள் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றன.
சீனா நிறுவனங்கள் மட்டும் அல்ல, உலகின் பல்வேறு டெக் ஜாம்பவான்களும், முதல் காலாண்டில் இருந்தே மெதுவாக வளர்ச்சியினை கண்டு வருவதாக கூறி வரும் நிலையில் பணி நீக்கமும் செய்துள்ளன. பணியமர்த்தலையும் குறைத்து வருகின்றன.
900 பேர் பணி நீக்கம்
இதற்கிடையில் தான் ஜியோமி நிறுவனமும் தனது ஊழியர்களில் 900 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஜியோமி அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 3% பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருவாய் சரிவு
எனினும் முழுமையாக எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்தான தகவல்கள் ஏதும் இல்லை. சீனாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், இந்த பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மந்த நிலைக்கு மத்தியில் அதன் வருவாய் விகிதம் மோசமான அளவில் சரிவினைக் கண்டுள்ளதாகவும், இது சுமார் 20% சரிவினைக் கண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த ஊழியர்கள்
ஜுன் 30 நிலவரப்படி, ஜியோமி 32,869 முழு நேர ஊழியர்களை கொண்டுள்ளது. அதில் 30,110 பேர் சீனாவில் பணி புரிபவர்கள். மீதமுள்ள பணியாளர்கள் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் பணிபுரியக்கூடியவர்கள்.
காலாண்டு அறிவிப்புக்கு பிறகு, அதன் தலைவர் வாங் சியாங், அதிகரித்து வரும் உலகளளாவிய பணவீக்கத்திற்கு மத்தியில், அன்னிய செலவாணியும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
அரசியல் பிரச்சனை
இதற்கிடையில் பதற்றமான அரசியல் சூழல் நிலவி வருகின்றது. இதனால் தொழிற்துறையானது மோசமான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்கள் ஒட்டுமொத்த சந்தை தேவையை குறைத்துள்ளன. இது எங்களின் நிதி முடிவுகளை கணிசமாக பாதித்துள்ளது என்று சியாங் கூறியுள்ளார்.
டெக் ஜாம்வான்கள் பணி நீக்கம்
உண்மையில் ஜியோமி மட்டும் அல்ல, இன்று உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்களும் வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர் கொண்டுள்ளன. இதனால் பல்வேறு டெக் நிறுவனங்கள், கார்ப்பரேட்கள் பலவும் மெதுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளன. அவர்கள் வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications